நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிவநேசன் கூறியது சரியான கூற்றாகும்; அரசாங்க அனுமதியுடன் நிறுவப்படும் ஆலயங்களுக்கு அரசாங்க பதிவு கிடைக்காமல் போகாது: எம். குலசேகரன்

ஈப்போ: 

தந்தை என்பவர் இவ்வுலகில் ஒரு மாமனிதன் என்பவராவார். அவர் ஒரு வீட்டிற்கு, நாட்டிற்கு மற்றும் குடும்பத்திற்கு மிகவும் முக்கியமானவர். ஒரு குடும்பத்தில் பிள்ளைகளின் வளர்ச்சிக்கும், வாழ்வாதாரத்திற்கும் அரும்பாடு பட்டவர் என்பது மிகையாகாது. அவரின் உழைப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் சுமார் 1000 பேர் கலந்துகொண்ட தந்தையர் தின விழாவை தொடக்கி வைத்தபோது மலேசிய சட்டத்துறை துணையமைச்சரும், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். குலசேகரன் கூறினார்.

தற்போது இந்நாட்டில் ஆலய நில பிரச்சினைகள் குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ளன. இவ்விவகாரத்தில் நாம் ஒரு விசயத்தை உணர்ந்து பேச வேண்டும். குறிப்பாக, ஆலயங்கள் அரசாங்க அனுமதியோடு கட்ட வேண்டும் என்று பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறியது சரியான கூற்றாகும். அவரின் கருத்தை நான் முழுமையாக  ஆதரிக்கிறேன் என்று அவர் தம் கருத்தை பதிவு செய்தார்.

May be an image of 5 people, speaker and text

அரசாங்க அனுமதியோடு கட்டப்படும் ஆலயங்களுக்கு அரசாங்க பதிவு (கேஸட்) கிடைத்துவிடும். அவ்வாறு பதிவு கிடைக்கப்பெற்ற ஆலயங்களுக்கு இப்பொழுதும், எப்பொழுதும் எந்தவொரு பிரச்சினையும் வராது என்று அவர் உறுதியளித்தார்.

ஆலயம் என்பது சமூகநல மையமாக திகழ வேண்டும். நமது பாரம்பரியம் இந்த கடப்பாட்டை தொன்றுதொட்டு பின்பற்றி வருகிறது. ஆகையால், ஆலயம் என்பது வெறும் இறைவனை வழிபாடும் இடமாக கருதாமல், இந்த சமூகத்தினர் ஒன்றுகூடும் இடமாக செயல்பட முற்பட வேண்டும். குறிப்பாக, இளைய சமூகத்திற்கு இந்து சமய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் இடமாக இருக்கும் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஒரு சில ஆலயங்களில் இன்னமும் குடும்ப நிர்வாகம் நடைபெற்று கொண்டிருக்கிறது. குறிப்பாக, சங்க பதிவு இலாகாவிற்கு ஏற்றாற்போல பத்து உறுப்பினருக்கு குறைவாக அரசு சாரா இயக்கங்கள் போல செயல்படுவது ஏற்புடையதல்ல. ஓர் ஆலயத்தில் 100 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பதிவு செய்யப்படுவது அவசியமாகும். இல்லையேல் அங்குள்ள இந்துகளை ஆலய உறுப்பினராக்க முற்படலாம். ஆனால், அதனை செய்யாமல் குடும்ப ஆலயமாக செயல்படுவது மிகவும் வருத்தமான விசயம் என்று எம்.குலசேகரன் கூறினார்.

- ஆர். பாலச்சந்தர் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset