செய்திகள் உலகம்
குவைத்தில் ஒவ்வொரு வீட்டிலும் முருங்கை - பிரச்சாரம் துவங்கியது
குவைத்:
குவைத்தில் ஒவ்வொரு வீட்டிலும் முருங்கை சாகுபடி என்ற தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பத்தாயிரம் முருங்கை நாற்றுகள் இலவசமாக விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குவைத்தில் ஒவ்வொரு வீட்டிலும் முருங்கை சாகுபடி என்ற தேசிய பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பத்தாயிரம் முருங்கை நாற்றுகள் இலவசமாக விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
கடந்த நான்கு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரத்தின் மூலம் 40,000 மரக்கன்றுகள் ஏற்கனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. நாட்டின் வடக்குப் பகுதிகளில் வளர்க்கப்படும் முருங்கை நாற்றுகளே இவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன.
மேலும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் முருங்கை தேவைப்படுபவர்களின் எண்ணிக்கையில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நிகழ்ச்சித் தலைவர் ஃபாத்திமா அல்-கைத் தெரிவித்தார்.
நாட்டின் ஆறு கவர்னரேட்டுகளில் அமைந்துள்ள முப்பத்தைந்து ஜமியாக்கள் மூலம் நாற்றுகள் விநியோகிக்கப்படுகின்றன.
www.moringakuwait.com என்ற இணையதளம் மூலம் முருங்கையின் மருத்துவ குணங்கள் மற்றும் முருங்கை தொடர்பான சமீபத்திய ஆய்வுகள் பற்றிய விபரங்களை விளம்பரப்படுத்தி வருகின்றனர் என்றும் தலைவர் விளக்கம் அளித்தார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
November 21, 2025, 9:33 pm
துபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானம் விபத்து: விமானி உயிரிழந்தார்
November 17, 2025, 10:58 pm
MalaysiaNow ஊடகத்தளத்திற்குத் தடை விதித்தது சிங்கப்பூர்
November 16, 2025, 9:11 pm
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சியில் பெரும் விரிசல்: டெய்லர் கிரீனுடன் மோதல் முற்றுகிறது
November 16, 2025, 9:49 am
ஜப்பானுக்குச் செல்லாதீர்கள்: சீனர்களை எச்சரிக்கும் சீனா
November 15, 2025, 4:12 pm
மாட்டிறைச்சி, காபிக்கு வரிவிலக்கு: டிரம்ப் அறிவிப்பு
November 15, 2025, 4:01 pm
MalaysiaNow நாளேட்டுக்குச் சிங்கப்பூர் POFMA சட்டத்தின்கீழ் திருத்த உத்தரவு
November 14, 2025, 3:31 pm
தைவான் குறித்த கருத்துகளை ஜப்பான் திரும்பப் பெற வேண்டும்: சீனா எச்சரிக்கை
November 14, 2025, 2:03 pm
