![image](https://imgs.nambikkai.com.my/kuwait.jpg)
செய்திகள் உலகம்
குவைத்தில் ஒவ்வொரு வீட்டிலும் முருங்கை - பிரச்சாரம் துவங்கியது
குவைத்:
குவைத்தில் ஒவ்வொரு வீட்டிலும் முருங்கை சாகுபடி என்ற தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பத்தாயிரம் முருங்கை நாற்றுகள் இலவசமாக விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குவைத்தில் ஒவ்வொரு வீட்டிலும் முருங்கை சாகுபடி என்ற தேசிய பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பத்தாயிரம் முருங்கை நாற்றுகள் இலவசமாக விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
கடந்த நான்கு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரத்தின் மூலம் 40,000 மரக்கன்றுகள் ஏற்கனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. நாட்டின் வடக்குப் பகுதிகளில் வளர்க்கப்படும் முருங்கை நாற்றுகளே இவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன.
மேலும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் முருங்கை தேவைப்படுபவர்களின் எண்ணிக்கையில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நிகழ்ச்சித் தலைவர் ஃபாத்திமா அல்-கைத் தெரிவித்தார்.
நாட்டின் ஆறு கவர்னரேட்டுகளில் அமைந்துள்ள முப்பத்தைந்து ஜமியாக்கள் மூலம் நாற்றுகள் விநியோகிக்கப்படுகின்றன.
www.moringakuwait.com என்ற இணையதளம் மூலம் முருங்கையின் மருத்துவ குணங்கள் மற்றும் முருங்கை தொடர்பான சமீபத்திய ஆய்வுகள் பற்றிய விபரங்களை விளம்பரப்படுத்தி வருகின்றனர் என்றும் தலைவர் விளக்கம் அளித்தார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
July 26, 2024, 11:02 am
பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் 17 பேருடன் கடலில் மூழ்கிய எண்ணெய்க் கப்பல்
July 25, 2024, 2:28 pm
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்: இலங்கைக்கு 93ஆவது இடம்
July 25, 2024, 12:46 pm
வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை ஈர்க்க அமீரகத்தில் சுகாதார காப்பீடுடன் கூடிய சுற்றுலா விசா
July 25, 2024, 10:28 am
கொரோனாவால் இறந்த முஸ்லிம்களை எரித்ததற்காக இலங்கை அரசு மன்னிப்பு கோருகிறது
July 25, 2024, 9:57 am
நெட்டன்யாஹுவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவிலும் இஸ்ரேலிலும் ஆர்ப்பாட்டங்கள்
July 24, 2024, 5:42 pm
ஒலிம்பிக் போட்டிக்கு பிறகே புதிய அரசாங்கம்: பிரெஞ்சு அதிபர் இமானுவல் மக்ரோன்
July 24, 2024, 5:27 pm
கனடாவில் ஹிந்து கோயில் மீது தாக்குதல்
July 24, 2024, 3:23 pm