செய்திகள் மலேசியா
தடம் புரண்ட லோரியில் சிக்கிய ஓட்டுநர் பலி: ரவாங்கில் சம்பவம்
ரவாங்:
தடம் புரண்ட லோரிக்கு அடியில் சிக்கிய ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
இந்த சம்பவம் இன்று காலை 5.41 மணிக்கு வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் ரவாங் அருகே நிகழ்ந்தது.
28 வயதான உள்ளூர் ஆடவர் ஓட்டிச் சென்ற டிரெய்லர் லோரி சாலையில் வழுக்கி தடம் புரண்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
லோரிக்கு அடியில் சிக்கியிருந்தவரை மீட்பதற்கு ஒரு சில நிமிடங்கள் பிடித்தது.
அதே வேளையில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் இறந்ததை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு படையின் உதவி இயக்குநர் ஹஃபிசாம் முஹம்மத் நோர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 18, 2025, 8:44 pm
2026இல் பூமிபுத்ரா, இந்திய தொழில்முனைவோருக்கான நிதி அதிகரிக்கப்படும்: ஸ்டீவன் சிம்
December 18, 2025, 6:15 pm
மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன்; அந்நிய தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்: பிரிமாஸ் நம்பிக்கை
December 18, 2025, 6:14 pm
உணவகத் துறைக்கு புதிய நம்பிக்கையாக டத்தோஸ்ரீ ரமணன் திகழ்கிறார்: டத்தோ மோசின்
December 18, 2025, 5:02 pm
உட்லண்ட்ஸ், துவாஸ் சாவடிகளில் அதிகப் போக்குவரத்து நெரிசல்: 3 மணி நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை
December 18, 2025, 1:53 pm
முதலாளிகளைத் தண்டிக்காதீர்கள்; பிரிவு 45 எஃப்ஐ அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: சைட் ஹுசேன்
December 18, 2025, 1:48 pm
அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினை; உள்துறை அமைச்சுடன் இணைந்து தீர்வு காண்பேன்: டத்தோஸ்ரீ ரமணன்
December 18, 2025, 10:38 am
சித்தியவான் மகா கணேசா வித்தியாசாலை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை: 15 பிரிவுகளில் சிறந்த மாணவர்கள் கௌரவிப்பு
December 18, 2025, 10:21 am
வள்ளுவர் மறை வைரமுத்து உரை எனும் நூல் திருக்குறளுக்கு புதிய புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்
December 18, 2025, 10:03 am
