செய்திகள் உலகம்
இஸ்ரேல் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 பாலஸ்தீனர்கள் கொலை
டெல் அவீவ்:
மேற்குக் கரையிலுள்ள அகதிகள் முகாமில் இஸ்ரேல் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
மேற்குக் கரையின் பலாட்டா பகுதியில் பயங்கரவாதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அதில் 3 பேர் கொல்லப்பட்டனர்; மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட இந்தத் தேடுதல் வேட்டையில் மேலும் 6 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் அமைந்துள்ள தற்போதைய கூட்டணி அரசு, அந்த நாட்டின் வரலாற்றிலேயே மிகத் தீவிரமான வலதுசாரி அரசு என்று அது கூறப்படுகிறது. புதிய அரசு அமைந்ததில் இருந்து பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேல் அரசு மிகக் கடுமையாக நடந்து வருகிறது.
இஸ்ரேல் படையினர் தாக்கி 250க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களும், பாலஸ்தீனர்கள் நடத்திய தாக்குதல்களில் சுமார் 50 இஸ்ரேலியர்களும் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 28, 2025, 10:22 pm
தோக்கியோ மிருகக்காட்சி சாலையில் இருந்து தப்பியோடிய ஓநாய்
December 28, 2025, 4:18 pm
சீனாவில் 2 விநாடிகளில் 700 கி.மீ. வேகத்தில் பறந்த ரயில்: புதிய உலக சாதனை
December 28, 2025, 10:38 am
சிங்கப்பூர் காவல்துறையின் ஆண்டிறுதிச் சோதனைகளில் 546 பேர் கைது
December 27, 2025, 6:01 pm
பள்ளிவாசல் இமாம்கள், முஅத்தின்கள் இனி அரசு ஊழியர்கள்: ஷார்ஜா அரசு அறிவிப்பு
December 27, 2025, 9:02 am
உம்ரா விசாவில் மக்காவில் பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களுக்கு வெளிநாடு செல்ல பாகிஸ்தான் அரசு தடை
December 26, 2025, 5:10 pm
நைஜீரியா நாட்டு பள்ளிவாசலில் வெடிகுண்டு தாக்குதல்: 5 பேர் பலி
December 25, 2025, 5:44 pm
கலிபோர்னியாவில் விரைவில் கடுமையான புயல், வெள்ளம் ஏற்படும்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு
December 25, 2025, 12:13 pm
முன்னாள் வழக்கறிஞர் M ரவியின் மர்ம மரணம்: அவருக்கு போதைப்பொருள் கொடுத்த நபர் கைது
December 23, 2025, 4:33 pm
