
செய்திகள் உலகம்
இஸ்ரேல் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 பாலஸ்தீனர்கள் கொலை
டெல் அவீவ்:
மேற்குக் கரையிலுள்ள அகதிகள் முகாமில் இஸ்ரேல் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
மேற்குக் கரையின் பலாட்டா பகுதியில் பயங்கரவாதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அதில் 3 பேர் கொல்லப்பட்டனர்; மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட இந்தத் தேடுதல் வேட்டையில் மேலும் 6 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் அமைந்துள்ள தற்போதைய கூட்டணி அரசு, அந்த நாட்டின் வரலாற்றிலேயே மிகத் தீவிரமான வலதுசாரி அரசு என்று அது கூறப்படுகிறது. புதிய அரசு அமைந்ததில் இருந்து பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேல் அரசு மிகக் கடுமையாக நடந்து வருகிறது.
இஸ்ரேல் படையினர் தாக்கி 250க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களும், பாலஸ்தீனர்கள் நடத்திய தாக்குதல்களில் சுமார் 50 இஸ்ரேலியர்களும் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2023, 6:26 pm
7 ஆண்டுகளுக்கு பிறகு ஈரானில் சவூதி தூதரகம் மீண்டும் திறப்பு
June 6, 2023, 3:52 pm
நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தாவுக்கு நாட்டின் உயரிய விருது
June 6, 2023, 2:34 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஹஜ்ஜு பெருநாளுக்கு நீண்ட விடுமுறைகள்
June 6, 2023, 1:06 pm
ஓமனில் 7,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் கைது: தொழிலாளர் அமைச்சகம் நடவடிக்கை
June 6, 2023, 12:32 pm
குவைத்தில் ஒவ்வொரு வீட்டிலும் முருங்கை - பிரச்சாரம் துவங்கியது
June 6, 2023, 11:51 am
27 பள்ளி மாணவிகளைக் கற்பழித்ததாக சந்தேகிக்கப்படும் ஆசிரியர் கைது
June 6, 2023, 9:44 am
சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் திடீர் நிலச்சரிவு 14 பேர் பலி - 5 பேர் மாயம்
June 3, 2023, 4:28 pm
மனைவிக்கு 2ஆம் இடம் கிடைத்த ஆத்திரம்: அழகி போட்டி கிரீடத்தை துண்டு துண்டாக உடைத்த கணவர்
June 3, 2023, 12:32 pm
காணாமல் போன 4 வயது சிறுவன் துணி துவைக்கும் இயந்திரத்தில் பிணமாக மீட்கப்பட்டான்
June 3, 2023, 12:06 pm