செய்திகள் உலகம்
இஸ்ரேல் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 பாலஸ்தீனர்கள் கொலை
டெல் அவீவ்:
மேற்குக் கரையிலுள்ள அகதிகள் முகாமில் இஸ்ரேல் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
மேற்குக் கரையின் பலாட்டா பகுதியில் பயங்கரவாதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அதில் 3 பேர் கொல்லப்பட்டனர்; மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட இந்தத் தேடுதல் வேட்டையில் மேலும் 6 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் அமைந்துள்ள தற்போதைய கூட்டணி அரசு, அந்த நாட்டின் வரலாற்றிலேயே மிகத் தீவிரமான வலதுசாரி அரசு என்று அது கூறப்படுகிறது. புதிய அரசு அமைந்ததில் இருந்து பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேல் அரசு மிகக் கடுமையாக நடந்து வருகிறது.
இஸ்ரேல் படையினர் தாக்கி 250க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களும், பாலஸ்தீனர்கள் நடத்திய தாக்குதல்களில் சுமார் 50 இஸ்ரேலியர்களும் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 27, 2025, 12:31 pm
சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகள் போல் நடித்து மோசடி: 24 பேர் கைது
October 25, 2025, 3:45 pm
தாய்லந்தின் முன்னாள் அரசியார் காலமானார்
October 25, 2025, 3:15 pm
காசாவிற்கு அனைத்துலக இராணுவப் படைகளை உடனடியாக அனுப்புமாறு அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் வலியுறுத்து
October 24, 2025, 9:45 pm
மேற்கு கரையை இணைக்க இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மசோதா
October 24, 2025, 4:27 pm
கனடாவுடன் எல்லா வர்த்தகப் பேச்சும் உடனடியாக நிறுத்தப்படும்: டிரம்ப்
October 23, 2025, 9:46 pm
$3 பில்லியன் கள்ளப் பண விவகாரம்: முன்னாள் சிங்கப்பூர் Citibank ஊழியருக்குச் சிறை
October 23, 2025, 2:10 pm
தாய்லாந்தில் ஆலய நன்கொடையை திருடி எடுத்துக்கொண்டு ஓடிய இஸ்ரேலிய ஆடவர் கைது
October 23, 2025, 1:30 pm
நைஜீரியாவில் கச்சா எண்ணெய் டேங்கர் வெடித்ததில் 39 பேர் உயிரிழந்தனர்
October 23, 2025, 9:11 am
இலங்கையில் கடும் மழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை
October 23, 2025, 8:23 am
