நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்கத்தில் உள்ளவர்களை தான் தேச நிந்தனையில் கைது செய்ய வேண்டும்: துன் மகாதீர்

கோலாலம்பூர்: 

தேச நிந்தனை குற்றத்திற்காக அரசாங்கத்தில் உள்ள தலைவர்களை தான் கைது செய்ய வேண்டும் என்று நஸ்ரிக்கு துன் மகாதீர் பதிலளித்து உள்ளார்.

மலாய்க்காரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் தவறினால், அதிகாரத்தில் உள்ளவர்கள மக்கள் வறுமையில் வாடுவதை விரும்புவது என அர்த்தமாகிறது.

அதே வேளையில் மலாய்க்காரர்களுக்கு அழுத்தம் கொடுப்பது இனவெறியின் வெளிப்பாடாகும்.

இவை தேசிய அரசியலைப்பிற்கு எதிரானது. இதனால் அரசாங்கத்தில் உள்ளவர்களை தான் தேச நிந்தனை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மகாதீர் கூறினார். 

முன்னதாக மலாய்க்காரர்களின் உரிமைகளை பற்றி பேசும் துன் மகாதீரை நேச நிந்தனையில் கைது செய்ய வேண்டும் என டத்தோஸ்ரீ நஸ்ரி அஜிஸ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset