
செய்திகள் மலேசியா
யானை குட்டி உயிரிழப்பு : இடத்தை விட்டு நகராத தாய் யானை
கிரிக்
பேரா கிரிக்-ஜெலி நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில், ஒரு ஐந்து வயது யானை குட்டி லாரியால் மோதப்பட்டு உயிரிழந்தது.
குட்டியின் தாய் யானை, இடத்தில் இருந்து நகர மறுத்து, அதன் உடலை நோக்கி சோகத்தில் நிற்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது. விடியற்காலம் வரை அங்கிருந்து நகராமல் இருந்த அந்த யானை, அந்த லாரியையும் தள்ள முயற்சித்ததும் அக்காட்சியில் பதிவாகியுள்ளது
இதனிடையே வன விலங்கு அதிகாரிகள் விரைந்து வந்தும், அந்த தாய் யானையை நகர்த்த முடியவில்லை. அது தன் குட்டியின் மரணத்தை ஏற்க முடியாமல் தவித்தது, என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வன விலங்கு பகுதிகளில் வாகனம் ஓட்டும் பயணிகள், விலங்குகளில் பாதுகாப்பிற்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்க வேண்டுமென இச்சம்பவத்தை காணொலி வாயிலாக பார்வையிட்ட இணையத்தள வாசிகள் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்
தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
May 13, 2025, 5:55 pm
சார்ஜன் எஸ்.பெருமாளின் திடீர் மரணம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
May 13, 2025, 5:29 pm
மொஹைதீனுக்கு எதிரான நிந்தனை வழக்கு விசாரணை: புதிய நிதிபதி வழக்கை செவிமடுப்பார்
May 13, 2025, 5:26 pm
தெலுக் இந்தான் சாலை விபத்தில் FRU அதிகாரிகள் மரணம்: மாமன்னர் தம்பதியர் இரங்கல்
May 13, 2025, 5:10 pm
தீயணைப்பு நிலையப் பின்னணியில் Pre Wedding Photoshoot செய்த தம்பதியின் காணொலி வைரல்
May 13, 2025, 5:09 pm
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 10.5% குறைந்துள்ளது
May 13, 2025, 3:44 pm