நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மோட்டார் சைக்கிளை டிரெய்லர் மோதியது மூன்றாம் ஆண்டு மாணவி மரணம்

பெட்டாலிங் ஜெயா:

மோட்டார் சைக்கிளை டிரெய்லர் மோதிய சம்பவத்தில் மூன்றாம் ஆண்டு மாணவி மரணமடைந்தார்.

இந்த சம்பவம் இன்று காலை கிள்ளான் துறைமுகத்தின் அருகே உள்ள கம்போங் தெலூக் கோங்கில் நிகழ்ந்து உள்ளது.

54 வயது மாது ஒருவர் இரு பிள்ளைகளை ஏற்றிக் கொண்டு பள்ளியில் இருந்து வீடு திரும்பி உள்ளார்.

அப்போது டிரெய்லர் லோரி ஒன்று அவர்கள் பயணித்த மோட்டாரை மோதி தள்ளியதாக நம்பப்படுகிறது.

இந்த சம்பவத்தில் 3ஆம் ஆண்டு மாணவி ஒருவர் லோரி டயர்களில் சிக்கி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

மற்ற இருவர் காயங்களுடன் உயிர் தப்பி உள்ளனர். இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset