நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈப்போவைச் சேர்ந்த ஈசன் ராஜா இங்கிலாந்து உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம்.

பெட்டாலிங் ஜெயா: 

ஈப்போவைப் பூர்வீகமாகக் கொண்ட ஈசன் ராஜா, இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் தமது பணியை ஏப்ரல் 18-ஆம் தேதி தொடங்கவுள்ளார். 

ராஜா, 56, சான்சரி துறையில் நீதிபதியாக இருப்பார்.

ஈப்போவில் மூத்த வழக்கறிஞரின் மகனான ராஜா, மலேசியா, இங்கிலாந்தில் கல்வி பயின்றார். அதன் பிறகு,  நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் தனது உயர் படிப்பைத் தொடர்ந்தார்.

2016-ஆம் ஆண்டு ராஜா பதிவாளராக நியமிக்கப்பட்டார். இதுவே நீதித்துறை பயணத்திற்கு அவர் முதல் படியாக அமைந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதியாக அதிகாரம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. 

- அஸ்வினி

தொடர்புடைய செய்திகள்

+ - reset