நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கம்போங் உடாரா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் உடைப்படுவதில் இருந்து தற்காலிகமாக காப்பாற்றப்பட்டது

கோலாலம்பூர்:

கம்போங் உடாரா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் உடைபடுவதில் இருந்து தற்காலிகமாக காப்பாற்றப்பட்டது.

சுங்கைபீசிக்கு அருகே கம்போங் உடாராவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

பல ஆண்டுகளாக இந்த ஆலயம் இங்கு அமைந்துள்ளது. அதே வேளையில் இவ்வாலயம் மலேசிய இந்து சங்கத்திலும் முறையாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேம்பாட்டு பணிகளால் இந்த ஆலயத்தை அகற்றக் கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.

அதே இடத்தில் ஆலயத்தை தற்காத்து கொள்ள ஆலய நிர்வாகத்தினர் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் ஆலயத்தை உடைக்க மேம்பாட்டு நிறுவனத்தினர் அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ், மஇகா இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் அன்ட்ரூ டேவிட், மியாபோர்ஸ் இயக்கத்தின் தலைவர் தயாளன், ஆலய நிர்வாகத்தினர் பொதுமக்கள் ஆகியோர் ஆலயத்தின் முன் திரண்டனர்.

மேம்பாட்டு நிறுவனம், அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம் இந்த ஆலயம் உடைபடுவதில் இருந்து தற்காலிகமாக காப்பாற்றப்பட்டு உள்ளது.

அதே வேளையில் இந்த ஆலயம் இங்கையே நிலை நிறுத்துவதா அல்லது வேறு இடத்திற்கு கொண்டு செல்வதா குறித்து ஆலய நிர்வாகத்திடம் விவாதிக்கப்படும்.

மேலும் இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் உதவியும் நாடப்படும் என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset