செய்திகள் மலேசியா
அதிகாலையில் அதிரடிச் சோதனை: 72 அந்நியத் தொழிலாளர்கள் கைது
கோலாலம்பூர்
இமிக்ரேஷன் துறை மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையின்போது சிலாங்கூர் மொத்த விற்பனைச் சந்தையில் 72 அந்நியத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
சனிக்கிழமை காலை இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இமிக்ரேஷன் அதிகாரிகள் வருவதை அறிந்த முறையான ஆவணங்கள் இல்லாத அந்நியத் தொழிலாளர்களில் பலர் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு தப்பிச்செல்ல முயன்றனர். சிலர் அங்கிருந்த மீன்பெட்டிகள், கழிவுநீர் குழாய்கள் ஆகியவற்றிலும்கூட ஒளிந்து கொண்டனர்.
சனிக்கிழமை அதிகாலை ஒரு மணி முதல் நான்கு மணி வரை இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஐ.நா. அகதிகள் அட்டை வைத்திருந்த 39 பேரும் 19 வங்கதேசத்தவர்களும், 9 மியான்மர் குடிமக்களும், 3 இந்தோனீசியர்களும், நேப்பாளம், இந்தியாவைச் சேர்ந்த தலா ஒருவரும் பிடிபட்டதாகத் தெரிய வருகிறது.
20 முதல் 50 வயதுக்குட்பட்ட இவர்கள் அனைவரும் உரிய பயண ஆவணங்கள் இல்லாதவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைத்திருப்பதாக உள்துறை துணை அமைச்சர் இஸ்மாயில் மொஹம்மட் சாயிட் தெரிவித்துள்ளார்.
சில அந்நியத் தொழிலாளர்கள் வைத்திருந்த ஐ.நா. அகதிகள் அட்டையும் சந்தேக்ததுக்குரியவை என்று அவர் கூறியுள்ளார்.
"தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் வைத்திருக்கும் அட்டைகள் உண்மையானவையா என்பதை அறிய விசாரணை நடத்தப்படும். வேலை அனுமதி உள்ளதா எனவும் கண்டறியப்படும்," என்று துணை அமைச்சர் இஸ்மாயில் மொஹம்மட் சாயிட் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
