
செய்திகள் மலேசியா
அதிகாலையில் அதிரடிச் சோதனை: 72 அந்நியத் தொழிலாளர்கள் கைது
கோலாலம்பூர்
இமிக்ரேஷன் துறை மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையின்போது சிலாங்கூர் மொத்த விற்பனைச் சந்தையில் 72 அந்நியத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
சனிக்கிழமை காலை இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இமிக்ரேஷன் அதிகாரிகள் வருவதை அறிந்த முறையான ஆவணங்கள் இல்லாத அந்நியத் தொழிலாளர்களில் பலர் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு தப்பிச்செல்ல முயன்றனர். சிலர் அங்கிருந்த மீன்பெட்டிகள், கழிவுநீர் குழாய்கள் ஆகியவற்றிலும்கூட ஒளிந்து கொண்டனர்.
சனிக்கிழமை அதிகாலை ஒரு மணி முதல் நான்கு மணி வரை இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஐ.நா. அகதிகள் அட்டை வைத்திருந்த 39 பேரும் 19 வங்கதேசத்தவர்களும், 9 மியான்மர் குடிமக்களும், 3 இந்தோனீசியர்களும், நேப்பாளம், இந்தியாவைச் சேர்ந்த தலா ஒருவரும் பிடிபட்டதாகத் தெரிய வருகிறது.
20 முதல் 50 வயதுக்குட்பட்ட இவர்கள் அனைவரும் உரிய பயண ஆவணங்கள் இல்லாதவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைத்திருப்பதாக உள்துறை துணை அமைச்சர் இஸ்மாயில் மொஹம்மட் சாயிட் தெரிவித்துள்ளார்.
சில அந்நியத் தொழிலாளர்கள் வைத்திருந்த ஐ.நா. அகதிகள் அட்டையும் சந்தேக்ததுக்குரியவை என்று அவர் கூறியுள்ளார்.
"தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் வைத்திருக்கும் அட்டைகள் உண்மையானவையா என்பதை அறிய விசாரணை நடத்தப்படும். வேலை அனுமதி உள்ளதா எனவும் கண்டறியப்படும்," என்று துணை அமைச்சர் இஸ்மாயில் மொஹம்மட் சாயிட் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm