
செய்திகள் மலேசியா
என்னது? தடுப்பூசி போட்டால் டுரியான் சாப்பிடக் கூடாதா?: தெளிவுபடுத்திய அமைச்சர்
கோலாலம்பூர்:
தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் டுரியான் பழங்கள் சாப்பிட்டால் இறந்துபோக நேரிடும் என்பது தவறான கூற்று என சுகாதார துணை அமைச்சர் டாக்டர் நூர் அஸ்மி கஸ்ஸாலி Dr Noor Azmi Ghazali தெரிவித்துள்ளார்.
இந்த கூற்றுக்கு மருத்துவ ரீதியில் எந்தவித ஆதாரங்களும் இல்லை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
அண்மையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவர் டுரியான் சாப்பிட்டதை அடுத்து இறந்து போனதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவியது. இது குறித்து கருத்து தெரிவிக்கும்போதே துணை அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
"எந்தவொரு மருத்துவப் புத்தகத்திலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் டுரியான் பழங்களைச் சாப்பிடக் கூடாது என்று குறிப்பிடவில்லை. எனக்குத் தெரிந்து மக்கள் சீனி (சர்க்கரை) அதிகம் உள்ள உணவுகளையும், அதிகப்படியான இனிப்பு நிறைந்த பானங்களையும் தவிர்த்தல் நல்லது. ஏனெனில், அவை நமது உடல்நலனுக்கு எதிரான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
"சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்ட ஆடவர் மாரடைப்பால்தான் காலமாகி உள்ளார். இது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, தடுப்பூசிக்குப் பின்னர் அவர் துரியான் சாப்பிட்டதற்கும் அவர் இறந்து போனதற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.
"எனவே, இது தொடர்பான தகவல் உண்மை அல்ல. தடுப்பூசி குறித்து தவறான தகவல்களைப் பகிர வேண்டாம். எந்தத் தகவலாக இருந்தாலும், அது உண்மையா என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் மக்கள் மத்தியில் வீண் அச்சங்கள் ஏற்படும். இது போன்ற தகவல்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு உரிய அறிவியல்பூர்வமான விளக்கங்களையும் உரிய தரவுகளையும் வெளியிடும்," என்று துணை அமைச்சர் டாக்டர் நூர் அஸ்மி கஸ்ஸாலி மேலும் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm