செய்திகள் மலேசியா
4 தெற்காசிய நாடுகளில் இருந்து வந்தால் 3 வாரங்களுக்கு தனிமைப்படுத்தல் நீடிக்கும்: அரசு அறிவிப்பு
கோலாலம்பூர்:
மேலும் சில தெற்காசிய நாடுளிலிருந்து மலேசிய வரக்கூடியவர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளில் இருந்து மலேசியா வருவரோக்கு இந்தவிதிமுறை பொருந்தும் எனத் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவல் அதிக அளவில் பதிவாகி வந்த நிலையில், அங்கிருந்து வரக்கூடிய பயணிகளை 21 நாட்கள் தனிமைப்படுத்துவது என மலேசிய அரசு முடிவு செய்து அறிவித்தது. பிற நாடுகளில இருந்து வருவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவ்வப்போது நிலவும் தொற்று அபாய அளவைப் பொறுத்து வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கான SOPகள் வகுக்கபடுவதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.
உருமாறிய கொரோனா வகைகளான டெல்டா, டெல்டா ப்ளஸ் உள்ளிட்ட புதிய தொற்றுக்கள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. எனவே, உலக நாடுகள் ஒவ்வொன்றும் புதிய விதிமுறைகளை அறிவித்து வருகின்றன.
இந் நிலையில் மேற்குறிப்பிட்ட 4 நாடுகளும் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் பட்டியலில் மலேசிய அரசாங்கத்தால் சேர்க்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
தென் தாய்லாந்தில் தீவிரமடையும் கலவரம்: நாட்டின் எல்லைகளில் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்
August 24, 2026, 3:44 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாளில் சிவசுப்பிரமணியம் டத்தோ விருது பெற்றார்
August 24, 2026, 3:07 pm
LRT இரயிலில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: 43 வயது வெளிநாட்டவர் கைது
August 24, 2026, 3:06 pm
