
செய்திகள் மலேசியா
அடுக்குமாடிக் குடியிருப்பில் பிறந்தநாள் கொண்டாட்டம்: ஏழு பேர் கைது
ஷா ஆலம்:
அடுக்குமாடிக் குடியிருப்பில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று ஷா ஆலம் பகுதியில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக SOPக்களை மீறி சிலர் ஒன்று கூடியிருப்பது குறித்து பொதுமக்களில் ஒருவர் புகார் அளித்ததை அடுத்து போலிசார் நடவடிக்கை மேற்கொண்டதாக ஷா ஆலம் மாவட்ட காவல்துறை தலைமை ஏசிபி பஹாருதீன் மாட் தய்யுப் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
கைதான ஏழு பேரும் 21 முதல் 37 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து 4.42 கிலோ எடை கொண்ட syabu-வும், 0.72 கிராம் யாபா (yaba) மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. ஐந்து தனி நபர்கள் போதை மருந்து உட்கொண்டது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
கைதான ஏழு பேருக்கும் தலா 4 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது என்றும், ஒன்றுகூடல் நிகழ்வில் பங்கேற்றது மற்றும் சமூக இடைவெளி பேணுவதைக் கடினமாக்கியது ஆகிய SOPக்களை மீறிய குற்றச்சாட்டுகளை அவர்கள் மீறியுள்ளனர் என்றும் ஏசிபி பஹாருதின் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைக்காக சந்தேக நபர்கள் நான்கு நாட்கள் போலிஸ் காவலில் வைத்து விசாரிக்கப்படுவார்கள் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm