
செய்திகள் இந்தியா
உலகிலேயே கொரோனா சிகிச்சை பொருட்களுக்கு இந்தியாவில்தான் அளவுக்கு அதிகமான இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது
டெல்லி:
கொரோனா தொடர்பான மருத்துவ பொருட்களுக்கு உலகிலேயே இந்தியாவில்தான் அதிக அளவு இறக்குமதி வரி விதிக்கப்படுவது ஆய்வு ஒன்றின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சீனாவுடன் ஒப்பிடுகையில் 2 மடங்கும் அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது 7 மடங்கு அதிகமாகவும் ஒன்றிய அரசு இயக்குமதி வரி விதிக்கிறது.
மும்பையில் உள்ள இந்திரா காந்தி மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உதாரணமாக இறக்குமதியாகும் கொரோனா தொடர்பான சிகிச்சை பொருட்களுக்கு இந்திய அரசு 15.2% இறக்குமதி வரி விதிக்கிறது. சீனாவை ஒப்பிடும் போது இது 2 மடங்கு அதிகமாகும்.
அமெரிக்காவை ஒப்பிட்டால் இறக்குமதி வரி இந்தியாவில் 7 மடங்கு அதிகமாகி உள்ளது. வருவாய் குறைவாக ஊழல் ஆப்ஃகானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளை விட சுமார் 60% அளவிற்கு இந்தியாவில் இறக்குமதி வரி அதிகம் உள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
கிருமிநாசினி மற்றும் சுத்தப்படுத்தும் பொருட்களுக்கு இந்திய ஒன்றிய அரசு 55.8% இறக்குமதி வரி விதிக்கிறது. ஆனால், சீனாவிலோ வெறும் 11.5% தான் இறக்குமதி வரி. அமெரிக்காவிலோ மிகக்குறைவாக 2% மட்டுமே இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகள் கூட 17.5% மட்டுமே இறக்குமதி வரியாக வசூலிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:14 pm
கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விழுந்து 7 பேர் பலி
June 15, 2025, 6:25 pm
கேரள கடலில் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டது
June 15, 2025, 8:52 am
கேரளாவில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 14, 2025, 10:15 pm
ஏர் இந்தியா விமான விபத்து: காப்பீடு ரூ.2,400 கோடி
June 14, 2025, 5:07 pm
அஹமதாபாத் விமான விபத்து: விமானியின் கடைசி வார்த்தைகள் என்ன?
June 14, 2025, 12:33 pm
மனைவியின் அஸ்தியைக் கரைக்க இந்தியா சென்ற கணவர் அஹமதாபாத் விமான விபத்தில் மரணம்
June 14, 2025, 10:43 am