செய்திகள் உலகம்
மியான்மர் நாட்டு இளம் பெண்ணைக் கொடுமைப்படுத்தி கொலை செய்த இந்தியப் பெண்ணுக்கு 30 ஆண்டு சிறை: சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்த மியான்மர் நாட்டு இளம் பெண்ணைக் கொடுமைப்படுத்தி கொலை செய்த இந்தியப் பெண்ணுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கெவின் செல்வம் அவரது மனைவி காயத்ரியுடன் வசிக்கின்றார். இவர்களின் வீட்டில் மியான்மரைச் சேர்ந்த பியாங் காய்டான் என்ற 24வயதுடைய பெண் வேலைக்கு சேர்ந்தார். அவரை பட்டினி போடுவது, இரும்புக் கம்பியால் சூடு வைப்பது, துடைப்பம் மற்றும் கட்டைகளால் அடிப்பது என காயத்ரியும் அவரது தாய் பிரேமாவும் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதற்கு கெவின் செல்வமும் உடந்தையாக இருந்துள்ளார்.
இவர்களது தொடர் தாக்குதலால் பியாங் காய்டான் எலும்பு முறிவு மற்றும் மூளை பாதிப்பு ஏற்பட்டு பலியானார். கொலை வழக்கில் கைதான காயத்ரிக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்த பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்குகளில் தற்போது விதிக்கப்பட்டுள்ளதே அதிகபட்ச தண்டனை. கெவின் செல்வம், பிரேமா ஆகியோர் மீதான வழக்கு விசாரணையில் உள்ளது. அவர்களுக்குரிய தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று மூத்த வழக்கறிஞர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி
December 10, 2025, 2:07 pm
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடையை ஆஸ்திரேலியா முதல் நாடாக அமல்படுத்தியது
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
