
செய்திகள் மலேசியா
புதிய மைல்கல்: ஒரே நாளில் 250,000 பேருக்கு தடுப்பூசி
கோலாலம்பூர்:
கொரோனா தடுப்பூசி போடுவதில் மலேசியா புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.
நேற்று ஒரே நாளில் சுமார் 250,000 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இத்தகவலை சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா தெரிவித்துள்ளார்.
நேற்று 250,529 தடுப்பூசிகள் போடப்பட்டதாக குறிப்பிட்ட அவர், அவற்றுள் 190,244 தடுப்பூசிகள் முதல் தவணையாக பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டது என்றார்.
60,285 ஊசிகள் இரண்டாவது தவணைக்காக காத்திருந்தவர்களுக்கு போடப்பட்டது.
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்றுதான் மிக அதிக அளவில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
கடந்த திங்கட்கிழமை ஜூன் 21ஆம் தேதி 235,623 தடுப்பூசிகள் போடப்பட்டன. நாட்டில் ஒட்டுமொத்தமாக செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6,301,727 ஆகும்.
இதுவரை 4,574,685 பேர் முதல் தவணை ஊசி போட்டுக் கொண்டுள்ளனர். 1,727,042 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று புதன்கிழமை தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் ஆதம் பாபா.
தற்போதைய தகவலின்படி, நாடு முழுவதும் 5.3 விழுக்காடு பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஆகஸ்ட் மாதம் தினமும் நான்கு லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதின் தெரிவித்துள்ளார்.
ஜூலை மாத மத்தியில் நாட்டில் பத்து விழுக்காட்டினருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதும் அரசாங்கத்தின் மற்றொரு இலக்கு என அவர் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
June 18, 2025, 12:58 pm
பெண் பணியாளரைத் தாக்கிய முதலாளிக்கு மனநல பாதிப்பு: போலீஸ் தகவல்
June 18, 2025, 12:43 pm
பணமோசடி குற்றச்சாட்டு: ஆலய சங்கத்தின் தலைவர், செயலாளருக்கு எதிராக தடுப்பு காவல்
June 18, 2025, 12:40 pm
காரில் பாம்பு இருப்பதாக கூறும் குறிப்பைக் கண்டு காதல் கடிதம் என்று நினைத்தேன்
June 18, 2025, 12:40 pm
நடிகர் ஆர்யாவுக்குச் சொந்தமான உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை
June 18, 2025, 12:38 pm
ரகசியத்தன்மை மீறல்: NFC-க்கு RM90 மில்லியன் நஷ்ட ஈடு வழங்க Public Bank-ற்கு உத்தரவு
June 18, 2025, 12:25 pm
தேசிய அளவில் சிறந்த இளைஞர் விருது 2025 : தஷிடரன் தர்மர் வென்றார்.
June 18, 2025, 12:21 pm
அமைச்சரவை மாற்றத்தை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்: கெராக்கான் வலியுறுத்தல்
June 18, 2025, 11:52 am
டான்ஶ்ரீ அப்துல் ஹடி அவாங் விரைவில் நலம் பெற பிரதமர் அன்வார் பிரார்த்தனை
June 18, 2025, 11:41 am
நெடுஞ்சாலையின் எதிர்திசையில் பயணம் செய்த மோட்டார் சைக்கிளோட்டி: காணொலி வைரல்
June 18, 2025, 11:40 am