
செய்திகள் மலேசியா
கோதுமை மாவின் விலை கடுமையாக அதிகரிக்குமா?: அமைச்சர் மறுப்பு
கோலாலம்பூர்:
ஜூலை 1ஆம் தேதி முதல் கோதுமை மாவின் விலை அதிகரிக்கும் என்று கூறப்படுவதை உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்ட்ரா நன்தா லிங்கி (Alexander Nanta Linggi) மறுத்துள்ளார்.
அப்படிப்பட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உற்பத்தியாளர்களுக்கு அனுமதி ஏதும் அளிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 1.35 ரிங்கிட் என்ற அளவிலேயே தற்போதும் நீடித்து வருவதாகவும், மானிய விலையில் விற்கப்படும் கோதுமை மாவின் விலை அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்றும் அமைச்சர் அறிக்கை ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.
ஜூலை 1ஆம் தேதி முதல் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப் போவதாக சமூக வலைத்தளங்களில் கடந்த சில வாரங்களாக ஒரு தகவல் பரவியது.
இந் நிலையில் மானியம் பெறப்படாத கோதுமை மாவுக்கான ஒரு கிலோ மற்றும் 25 கிலோ எடைகொண்ட பாக்கெட்டுகளின் விலையை உயர்த்த அனுமதி கோரி உற்பத்தியாளர்களிடம் இருந்து தமது அமைச்சுக்கு விண்ணப்பங்கள் வந்திருப்பதாக Alexander Nanta Linggi தெரிவித்துள்ளார்.
எனினும், விலை உயர்வுக்கு முன்னர் விநியோக கட்டுப்பாட்டாளரின் அனுமதியை உற்பத்தியாளர்கள் பெற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
"எனவே தற்போதைய நிலையில் கோதுமை மாவின் விலையை உயர்த்த உற்பத்தியாளருக்கு எந்தவித அனுமதியும் அளிக்கப்படவில்லை," என அமைச்சர் Alexander Nanta Linggi தெளிவுபடுத்தி உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm