செய்திகள் மலேசியா
பொதுத்தேர்தல் குறித்து பிரதமர் கோடிகாட்டினார்: டத்தோ உஸ்மான் சபியான்
கோலாலம்பூர்:
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும் 15ஆவது பொதுத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஜோகூர் மாநில முன்னாள் முதல்வர் டத்தோ உஸ்மான் சபியான் Osman Sapian தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் டான்ஸ்ரீ மொஹிதின் யாசின் கோடிகாட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 16ஆம் தேதி இணையம் வழி நடைபெற்ற கட்சிக்கூட்டத்தில் பங்கேற்ற போது பிரதமர் பேசியது தம்மை இவ்வாறு கருத வைத்ததாக டத்தோ உஸ்மான் கூறினார்.
"நிதிநிலை அறிக்கை தாக்கல் கூட்டரசு அளவில் நிறைவேறிய பின்னர் மாநிலங்களில் கவனம் செலுத்துவோம். இல்லையெனில் மாநிலங்கள் நிதிநிலை அறிக்கை நிறைவேற்ற காத்திருக்க வேண்டும்.
"எனவே, இந்த ஆண்டு இறுதியில் பொதுத்தேர்தல் நடத்தப்படக் கூடும். அநேகமாக நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடக்கக்கூடும்.
"எதுவும் முடியாத ஒன்றல்ல. இதற்கு முன்பும்கூட பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் பொதுத் தேர்தல்கள் நடந்துள்ளது. அதே சமயம் ஆண்டு இறுதியில் பருவ மழைக்காலம் என்பதால் அடுத்த ஆண்டு தொடக்கத்திலும் தேர்தல் நடைபெற வாய்ப்புண்டு.
"அரசாங்கம் வகுத்துள்ள இலக்குகளுக்கு ஏற்ப தொற்று எண்ணிக்கை குறையும் பட்சத்தில், நாட்டில் 80 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது எனில் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்படலாம்," என்றார் டத்தோ உஸ்மான் சபியான்.
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 5:40 pm
கேமரன் மலைப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்: 60 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விபத்துகுள்ளானது
February 24, 2026, 5:39 pm
லாரி நிறுவனத்தைப் பாதுகாக்கும் மூன்று அமலாக்க அதிகாரிகள் உட்பட 12 பேர் கைது: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
February 24, 2026, 5:37 pm
உயர்க்கல்விக்கூடங்களில் சேர்வதற்கு HIV சோதனை தேவை இல்லை
February 24, 2026, 5:36 pm
சர்க்கரை, எண்ணெய் கடத்தல் முறியடிப்பு: KPDN அதிரடி வேட்டை
February 24, 2026, 5:33 pm
அவசர பாதையில் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழந்தார்
February 24, 2026, 5:27 pm
சட்டவிரோதமாக இயங்கிக் கொண்டிருக்கும் விபச்சார மையத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த காவல்துறையினர்: 23 பேர் கைது
February 24, 2026, 4:53 pm
பாங்கி ரமலான் சந்தையில் அதிரடி சோதனை: 13 சட்டவிரோத குடியேறிகள் கைதாகினர்
February 24, 2026, 4:31 pm
கத்தியைக் கொண்டு தனது சகோதரனை கொலை செய்வதாக மிரட்டிய ஆடவர் நீதிமன்றத்தில் ஆஜராகினார்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
