செய்திகள் மலேசியா
மூல காரணம் தெரியாத தொற்றுகள் அதிகரிப்பு: நூர் ஹிஷாம் கவலை
கோலாலம்பூர்:
கிருமித்தொற்றுக்கான மூல காரணம் தெரியாத அல்லது எந்த நடப்பு தொற்றுத் திரள்களுடனும் தொடர்பில்லாத நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை தருவதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 578,105 என்றும், அவர்களில் சுமார் 400,000 பேர் மேற்குறிப்பிட்ட வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
மூல காரணங்கள் தெரியாத தொற்றுச் சம்பவங்கள் சிலாங்கூரில் தான் அதிகம் பதிவாகி உள்ளது. அம்மாநிலத்தில் 151,725 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூரில் 44,517, சரவாக்கில் 40,889 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
"மூல காரணம் தெரியாத சமூகத் தொற்றுகளின் எண்ணிக்கை இன்னும் குறைந்தபாடில்லை. இத்தகைய தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களிடம் தொற்று அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்பதுதான் மிகுந்த கவலை அளிக்கிறது.
"இதனால் மற்றவர்களுக்கும் மிக எளிதில் தொற்று பரவுகிறது. SOPக்களை பின்பற்றாததால் இவ்வாறு தொற்று ஏற்படுகிறது," என்று அறிக்கை ஒன்றில் டாக்டர் நூர் ஹிஷாம் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 2:56 pm
எல்ஆர்டி 3 திட்டம் செயல் வடிவம் பெற்றதால் நஜிப்பின் உணர்வுகள் வெளிப்பட்டன: கைரி
July 10, 2026, 2:52 pm
ஜொகூர் மாநில தேர்தலில் 70 விழுக்காடு வரை வாக்குப்பதிவாகலாம்: மலேசியத் தேர்தல் ஆணையம் தகவல்
July 10, 2026, 11:56 am
ஜொகூர் மாநில தேர்தலில் 15 இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
July 10, 2026, 11:05 am
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க போவது யார் ?
July 10, 2026, 11:03 am
மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
July 10, 2026, 10:58 am
