
செய்திகள் உலகம்
அமெரிக்காவில் சீனா புத்தாண்டின் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
நியூயார்க்:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே மாண்ட்ரே பார்க் நகரம் அமைந்துள்ளது.
அங்கு கார்வே அவென்யூ பகுதியில் செங் வான் சோய் என்ற சீன வம்சாவளி தொழிலதிபருக்கு சொந்தமான ஓட்டல் செயல்படுகிறது.
அந்த ஓட்டலில் நேற்று இரவு சீன புத்தாண்டு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது மர்ம நபர் ஒருவர், அதிநவீன துப்பாக்கியுடன் ஓட்டலில் நுழைந்து கண் மூடித்தனமாக சுட்டார். இதில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து தாக்குதல் நடத்திய மர்ம நபரை பிடிக்க முயன்றபோது தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாண்ட்ரே பார்க் நகரம் முழுவதும் சீன புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
- செய்திப்பிரிவு
தொடர்புடைய செய்திகள்
February 2, 2023, 2:23 pm
ஈரானில் இளம் ஜோடி தெருவில் கட்டிப்பிடித்து நடனம்; வைரலான வீடியோ: 10 வருடம் சிறை
February 2, 2023, 2:04 pm
அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி நிக்கி ஹாலே போட்டி?
February 1, 2023, 12:21 am
உங்கள் டிக்கெட் உங்கள் விசா: சவுதி அரசு அறிமுகம்
January 31, 2023, 8:56 pm
ஆஸ்திரேலியா: இந்தியர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்
January 31, 2023, 5:50 pm
சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம்
January 31, 2023, 1:51 pm
சீனப் புத்தாண்டு பரிசு: 61 மில்லியனை ஊழியர்களுக்கு வழங்கி மகிழ்ந்த சீன சுரங்க நிறுவனம்
January 31, 2023, 8:32 am
பாகிஸ்தான் பெஷாவரில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு - 100 பேர் காயம்
January 29, 2023, 8:06 pm
தென்கொரியாவில் உள் வளாகங்களில் முகக்கவசம் அணிவது கைவிடப்படுகிறது
January 29, 2023, 7:52 pm
பதிலடி தாக்குதல்கள்: இஸ்ரேல் -பாலஸ்தீனத்தில் அதிகரிக்கும் போர் பதற்றம்
January 29, 2023, 11:35 am