
செய்திகள் மலேசியா
மந்தை நோய் எதிர்ப்பு சக்தி என்ற இலக்கை அடைவோம்: பிரதமர் நம்பிக்கை
புத்ராஜெயா:
மந்தை நோய் எதிர்ப்பு சக்தி என்ற இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாக பிரதமர் டான்ஸ்ரீ மொஹிதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளில் இருந்து வாங்கப்படும் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட இலக்கை அடையமுடியும் என பிரதமர் கூறியுள்ளார்.
மேலும், அரசாங்கத்தால் வாங்கப்படும் தடுப்பூசிகள் அனைத்தும் உரிய நேரத்தில் மலேசியா வந்தடைவதை உறுதி செய்ய அரசு கடுமையாக முயற்சிக்கும் என்றார் பிரதமர்.
"தேசிய தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பாளரும் அமைச்சருமான ஜமாலுதீன் கைரி தேவையான தடுப்பூசிகள் கிடைக்கும் பட்சத்தில் இலக்குகளை அடையமுடியும் என்பதை பல முறை தெரிவித்துள்ளார். தடுப்பூசிகளை வாங்கக்கூடாது என்றோ அதை தடுக்கவேண்டும் என்பதோ அரசாங்கத்தின் எண்ணமல்ல.
"அனைத்தையும் ஒன்றிரண்டு மாதங்களில் முடித்துவிட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஆனால் போதுமான தடுப்பூசிகள் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை நிலவரம். தடுப்பூசி "விநியோகிப்பாளர்களை நம்மால் கட்டுப்படுத்த இயலாது. ஏனெனில், அவர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்.
எனவே, நமக்கான முறை வரும்வரை காத்திருக்கத்தான் வேண்டும். எனினும், நாம் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் தடுப்பூசிகள் வந்து சேரும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது.
"அதேவேளையில் தடுப்பூசி போடுவதற்காக முன்பதிவு நடவடிக்கைகளை நாம் வேகப்படுத்தியாக வேண்டும். முன்பதிவுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து முன்பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காலை முதல் இரவு வரை அனைவரும் உத்வேகத்துடன் பணியாற்றுகிறார்கள்," என்றார் பிரதமர் மொஹிதீன் யாசின்.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm