செய்திகள் மலேசியா
இதுவரை 5.5 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன: சுகாதார அமைச்சு
கோலாலம்பூர்:
நாடு முழுவதும் இதுவரை 5.5 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவற்றுள் முதல் மற்றும் இரண்டாம் தவணை நடுப்பூசிகளும் அடங்கும்.
வெள்ளிக்கிழமை வரை 3,957,687 பேர் முதல் தவணை ஊசி போட்டுக் கொண்டுள்ளனர் என்றும், 1,553,033 பேருக்கு இரண்டாம் தவணை ஊசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் சுகாதார அமைச்சர் ஆதம் பாபா கூறினார்.
ஒட்டுமொத்தத்தில் 5,510,720 பேர் ஊசி போட்டுக் கொண்டனர் என அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுவரை ஐந்து மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இம்மாநிலங்களில் ஏராளமானோருக்கு இரு தவணை தடுப்பூசிகளுல் போடப்பட்டு விட்டதாக அப் பதிவு தெரிவிக்கிறது.
சிலாங்கூரில் 202,143, சரவாக்கில் 174,545, ஜோகூரில் 151,140, பேராக்கில் 144,086 மற்றும் கோலாலம்பூரில் 141,045 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு இருப்பதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நேற்று வெள்ளிக்கிழமை அன்று 180,066 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்களில் 147,616 பேருக்கு முதல் தவணையும், 32,450 பேருக்கு இரண்டாம் தவணையுமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் நேற்று வரை 14,877,336 பேர் தடுப்பூசிக்காக பதிவு செய்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 5:40 pm
கேமரன் மலைப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்: 60 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விபத்துகுள்ளானது
February 24, 2026, 5:39 pm
லாரி நிறுவனத்தைப் பாதுகாக்கும் மூன்று அமலாக்க அதிகாரிகள் உட்பட 12 பேர் கைது: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
February 24, 2026, 5:37 pm
உயர்க்கல்விக்கூடங்களில் சேர்வதற்கு HIV சோதனை தேவை இல்லை
February 24, 2026, 5:36 pm
சர்க்கரை, எண்ணெய் கடத்தல் முறியடிப்பு: KPDN அதிரடி வேட்டை
February 24, 2026, 5:33 pm
அவசர பாதையில் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழந்தார்
February 24, 2026, 5:27 pm
சட்டவிரோதமாக இயங்கிக் கொண்டிருக்கும் விபச்சார மையத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த காவல்துறையினர்: 23 பேர் கைது
February 24, 2026, 4:53 pm
பாங்கி ரமலான் சந்தையில் அதிரடி சோதனை: 13 சட்டவிரோத குடியேறிகள் கைதாகினர்
February 24, 2026, 4:31 pm
கத்தியைக் கொண்டு தனது சகோதரனை கொலை செய்வதாக மிரட்டிய ஆடவர் நீதிமன்றத்தில் ஆஜராகினார்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
