செய்திகள் மலேசியா
இதுவரை 5.5 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன: சுகாதார அமைச்சு
கோலாலம்பூர்:
நாடு முழுவதும் இதுவரை 5.5 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவற்றுள் முதல் மற்றும் இரண்டாம் தவணை நடுப்பூசிகளும் அடங்கும்.
வெள்ளிக்கிழமை வரை 3,957,687 பேர் முதல் தவணை ஊசி போட்டுக் கொண்டுள்ளனர் என்றும், 1,553,033 பேருக்கு இரண்டாம் தவணை ஊசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் சுகாதார அமைச்சர் ஆதம் பாபா கூறினார்.
ஒட்டுமொத்தத்தில் 5,510,720 பேர் ஊசி போட்டுக் கொண்டனர் என அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுவரை ஐந்து மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இம்மாநிலங்களில் ஏராளமானோருக்கு இரு தவணை தடுப்பூசிகளுல் போடப்பட்டு விட்டதாக அப் பதிவு தெரிவிக்கிறது.
சிலாங்கூரில் 202,143, சரவாக்கில் 174,545, ஜோகூரில் 151,140, பேராக்கில் 144,086 மற்றும் கோலாலம்பூரில் 141,045 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு இருப்பதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நேற்று வெள்ளிக்கிழமை அன்று 180,066 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்களில் 147,616 பேருக்கு முதல் தவணையும், 32,450 பேருக்கு இரண்டாம் தவணையுமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் நேற்று வரை 14,877,336 பேர் தடுப்பூசிக்காக பதிவு செய்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
April 11, 2026, 11:37 am
டீசல் மானியம் வேண்டி நாளை முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தம்: டோ டிரக் உரிமையாளர்கள் அறிவிப்பு
April 11, 2026, 11:19 am
இரவோடு இரவாக வீடிழந்த 8 பேர்
April 10, 2026, 11:20 pm
ரபிசி குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு; பொருளாதாரத்திற்கே அதிக முன்னுரிமை: பிரதமர்
April 10, 2026, 11:19 pm
எஸ்பிஎம் தேர்வின் நன்னெறி பாடத்தில் ஏ எடுப்பது அவ்வளவு சிரமமா?: டத்தோ நெல்சன் கேள்வி
April 10, 2026, 11:17 pm
தெலுக் இந்தானில் சித்ரா பௌர்ணமி திருவிழா; தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணாது: சிவநேசன்
April 10, 2026, 11:16 pm
80ஆம் ஆண்டு நிறைவு விழா; மஇகாவின் அடையாளத்தையும் சாதனையையும் பறைசாற்றும்: டத்தோ முருகையா
April 10, 2026, 3:43 pm
நாற்காலியால் மனைவியை அடித்த வேலையில்லாதவருக்கு RM3,500 அபராதம்
April 10, 2026, 3:33 pm
மலேசியாவின் 6 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துவிட்டன
April 10, 2026, 3:32 pm
