செய்திகள் மலேசியா
SPM தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் ஃபைசர் தடுப்பூசியை ஜூலை மாதம் இறுதிக்குள் போட திட்டம்: கைரி ஜமாலுதீன்
கோலா லம்பூர்:
ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியைப் பயன்படுத்தி படிவம் ஐந்து மாணவர்கள் அடுத்த மாதம் தங்கள் கோவிட் -19 தடுப்பூசி பெறத் தொடங்குவார்கள் என்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார்.
"மாணவ மாணவிகளுக்காக அதனை நாங்கள் ஜூலை மாதத்திற்குள் செய்ய முயற்சிக்கிறோம்.
“ஜூலை மாதத்தில் முதல் டோஸ் தடுப்பூசியை படிவம் ஐந்து மாணவர்களுக்கு செலுத்த திட்டமிட்டு வருகிறோம். ஏனெனில், கல்வி அமைச்சரும் அத் திட்டம் அமலாவதை விரும்புகிறார்.
இதனை இன்னும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் (என்.எஸ்.சி) முடிவு செய்யவில்லை, ஆனால், தேர்வு எழுதும் மாணவர்கள், படிவம் ஐந்து மற்றும் படிவம் ஆறு மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற விருப்பத்தை கல்வி அமைச்சர் வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஆகவே, ஜூலை மாதத்திற்குள் அவர்களுக்கு தடுப்பூசிகளைக் கொடுக்க வேண்டும், ”என்றும் மாணவர்களுக்கான தடுப்பூசிகளைப் பள்ளிகளில் செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் கைரி தெரிவித்தார்.
புதன்கிழமை, சுகாதார இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாஹ், ஃபைசர்-பயோஎன்டெக் தயாரித்த கொமிர்னாட்டி தடுப்பூசி 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
359 வது மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் (பி.கே.பி.டி) கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர் கூறினார்.
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களைப் பயன்படுத்துவதற்கு 2021 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி நிபந்தனையுடன் பதிவு செய்ய முன்பு அங்கீகரிக்கப்பட்டிருந்ததையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 10:08 pm
கனமழையை தொடர்ந்து தலைநகரில் திடீர் வெள்ளம்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
