நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் இன்று கொரொனா தொற்று நோயாளிகள் 6,440 சிலாங்கூர் 2095; தடுப்பூசி போட்டவர்கள் 221,706

கோலாலம்பூர்:

மலேசியாவில் இன்று புதிதாக 6,440 பேருக்கு கோவிட் 19 தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. 

இன்றும் அதிக பாதிப்புள்ள மாநிலங்களின் பட்டியலில் சிலாங்கூர் முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,095 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

இரண்டாம் இடத்தில் இன்றும் நெகிரி செம்பிலான் 870 பேருடன் பதிவு செய்துள்ளது.

மூன்றாவது இடத்தில் கோலாலம்பூர் இருக்கிறது. கூட்டரசுப் பிரதேசத்தில் 816 பேர் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

சரவாக்கில்  536 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். 

ஜொகூரில் 592 பேரும் பேராக்கில் 357 பேரும் மலாக்காவில் 223 பேரும் கிளந்தானில் 200 பேரும் சபாவில் 199 பேரும் கெடாவில் 159 பேரும் லாபுவானில் 152 பேரும் பினாங்கில் 122 பேரும் பஹாங்கில் 79 பேரும் திரெங்கானு 32 பேரும் புத்ராஜெயாவில் 6 பேரும் பெர்லிஸில் 2 பேரும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 221,706 பேர் ஆவர். முதல் தவணை போட்டு முடித்தவர்கள் 177,876 பேர். இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்  48,830 பேர் ஆவர்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset