செய்திகள் மலேசியா
மலேசியாவில் இன்று கொரொனா தொற்று நோயாளிகள் 6,440 சிலாங்கூர் 2095; தடுப்பூசி போட்டவர்கள் 221,706
கோலாலம்பூர்:
மலேசியாவில் இன்று புதிதாக 6,440 பேருக்கு கோவிட் 19 தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இன்றும் அதிக பாதிப்புள்ள மாநிலங்களின் பட்டியலில் சிலாங்கூர் முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,095 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாம் இடத்தில் இன்றும் நெகிரி செம்பிலான் 870 பேருடன் பதிவு செய்துள்ளது.
மூன்றாவது இடத்தில் கோலாலம்பூர் இருக்கிறது. கூட்டரசுப் பிரதேசத்தில் 816 பேர் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
சரவாக்கில் 536 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
ஜொகூரில் 592 பேரும் பேராக்கில் 357 பேரும் மலாக்காவில் 223 பேரும் கிளந்தானில் 200 பேரும் சபாவில் 199 பேரும் கெடாவில் 159 பேரும் லாபுவானில் 152 பேரும் பினாங்கில் 122 பேரும் பஹாங்கில் 79 பேரும் திரெங்கானு 32 பேரும் புத்ராஜெயாவில் 6 பேரும் பெர்லிஸில் 2 பேரும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 221,706 பேர் ஆவர். முதல் தவணை போட்டு முடித்தவர்கள் 177,876 பேர். இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 48,830 பேர் ஆவர்.
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 2:56 pm
எல்ஆர்டி 3 திட்டம் செயல் வடிவம் பெற்றதால் நஜிப்பின் உணர்வுகள் வெளிப்பட்டன: கைரி
July 10, 2026, 2:52 pm
ஜொகூர் மாநில தேர்தலில் 70 விழுக்காடு வரை வாக்குப்பதிவாகலாம்: மலேசியத் தேர்தல் ஆணையம் தகவல்
July 10, 2026, 11:56 am
ஜொகூர் மாநில தேர்தலில் 15 இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
July 10, 2026, 11:05 am
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க போவது யார் ?
July 10, 2026, 11:03 am
மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
July 10, 2026, 10:58 am
