செய்திகள் மலேசியா
இது போலித்தனமான அறிக்கை: நஜிப் துன் ரசாக் காட்டம்
கோலாலம்பூர்:
நாடாளுமன்றக் கூட்டத்தை மீண்டும் கூட்டுவதற்காக அரசாங்கம் அனைத்துவித நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை போலித்தனமானது என முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத்துக்கான அறிவிப்பை வெளியிடாதவரை பிரதமர் அலுவலகத்தின் அறிக்கை போலியானதாகவே கருதப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
"வழக்கமான இயல்புநிலையின் போது நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு 28 நாட்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியிட வேண்டும். எனினும், அவசரநிலையின் போது இதில் இருந்து விலக்கு அளிக்கலாம்.
"கொரோனா SOPக்களைப் பின்பற்றாதவர்களுக்கு பத்து மடங்கு அபராதம் விதிப்பது, பொய்யான தகவல்களைப் பரப்புவோருக்கு ஒரு லட்சம் ரிங்கிட் அபராதம் விதிக்கும் சட்டத்தை அமல்படுத்துவது ஆகியவற்றுக்காக அவசரகால சட்டங்கள் இயற்றப்பட்டன. அதேபோல், நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட முடியும்," என்று முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என அவர் சார்ந்துள்ள அம்னோ கட்சியும் வலியுறுத்தி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
