
செய்திகள் மலேசியா
இது போலித்தனமான அறிக்கை: நஜிப் துன் ரசாக் காட்டம்
கோலாலம்பூர்:
நாடாளுமன்றக் கூட்டத்தை மீண்டும் கூட்டுவதற்காக அரசாங்கம் அனைத்துவித நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை போலித்தனமானது என முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத்துக்கான அறிவிப்பை வெளியிடாதவரை பிரதமர் அலுவலகத்தின் அறிக்கை போலியானதாகவே கருதப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
"வழக்கமான இயல்புநிலையின் போது நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு 28 நாட்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியிட வேண்டும். எனினும், அவசரநிலையின் போது இதில் இருந்து விலக்கு அளிக்கலாம்.
"கொரோனா SOPக்களைப் பின்பற்றாதவர்களுக்கு பத்து மடங்கு அபராதம் விதிப்பது, பொய்யான தகவல்களைப் பரப்புவோருக்கு ஒரு லட்சம் ரிங்கிட் அபராதம் விதிக்கும் சட்டத்தை அமல்படுத்துவது ஆகியவற்றுக்காக அவசரகால சட்டங்கள் இயற்றப்பட்டன. அதேபோல், நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட முடியும்," என்று முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என அவர் சார்ந்துள்ள அம்னோ கட்சியும் வலியுறுத்தி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm