
செய்திகள் மலேசியா
ஆறு மாதங்களுக்குள் நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்: துங்கு ரசாலி
கோலாலம்பூர்:
கடைசியாக நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டம் முடிந்த ஆறு மாதங்களுக்குள் மீண்டும் நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று அம்னோ மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்ஸா தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பை புறக்கணிக்குமாறு மாமன்னருக்கு பிரதமர் மொஹிதின் யாசின் ஆலோசனை வழங்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மலேசிய நாடாளுமன்றம் கடைசியாக கூடியதில் இருந்து இன்றோடு ஆறு மாதக் காலம் முடிந்துவிட்டதாகவும் குவா மூசாங் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான துங்கு ரசாலி சுட்டிக்காட்டி உள்ளார். இதனால் கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறியதாக கருதப்படும் என்றார் அவர்.
மலேசிய நாடாளுமன்றம் கடைசியாக டிசம்பர் 17ஆம் தேதி கூடியது. அதன் பிறகு இன்றுடன் ஆறு மாதங்கள் நிறைவடைந்ததாக துங்கு ரசாலி தெரிவித்தார்.
Article 55இன்படி, மாமன்னர் மட்டுமே நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு உத்தரவிட முடியும் என்றும், நாடாளுமன்றக் கூட்டத்தை ஒத்திவைக்கவோ அல்லது கலைக்கவோ அவருக்கு மட்டுமே முழுமையான அதிகாரம் உண்டு என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm