செய்திகள் மலேசியா
கிளந்தானில் பாதிப்பு அதிகரிக்க கொரோனா Beta திரிபு காரணமாக இருக்கலாம்: சுகாதாரத்துறை விளக்கம்
கோத்தாபாரு:
கிளந்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா Beta திரிபு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
அம் மாநிலத்தில் கண்டறியப்பட்ட பல்வேறு தொற்றுத் திரள்களுடன் சம்பந்தப்பட்ட 23 மாதிரிகள் அண்மையில் பரிசோதிக்கப்பட்டதாக அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஜெய்னி ஹுசின் (Zaini Hussin) தெரிவித்துள்ளார்.
"தொற்று உறுதியான அனைத்து மாதிரிகளையும் மேலதிகப் பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதில்லை. இம்மாநிலத்தில் கண்டறியப்பட்ட தொற்றுத் திரள்களுடன் தொடர்புடைய மாதிரிகள் மட்டுமே மேலதிகமாக பரிசோதிக்கப்படுகின்றன.
"இதன்வழி கிளந்தானில் அண்மையில் உறுதி செய்யப்பட்ட பெரும்பாலான தொற்றுச் சம்பவங்களுக்குக் கொரோனாவின் Beta திரிபு காரணமாக இருக்க வாய்ப்புண்டு. இந்தக் கிருமித்தொற்று திரிபு மிக வேகமாக பரவக்கூடியது.
"மேலும் அன்றாடம் பதிவாகும் சராசரி மரண எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கிளந்தானில் கடந்த ஆண்டு 7 பேர் மட்டுமே பலியான நிலையில் அந்த எண்ணிக்கை இப்போது 175 ஆக உள்ளது. Beta திரிபானது கிளந்தானில் சமூக அளவில் பரவியுள்ளது," என்றார் டாக்டர் Zaini Hussin.
நேற்று கிளந்தானில் 245 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,837 ஆக உள்ளது. மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 12 விழுக்காட்டினர், அதாவது 1.2 மில்லியன் பேர் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டுள்ளனர்.
தற்போது தினமும் 6 முதல் 8 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்த எண்ணிக்கை ஜூலை மாதத்தில் 14 ஆயிரம் முதல் 32 ஆயிரம் வரை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
