செய்திகள் மலேசியா
கிளந்தானில் பாதிப்பு அதிகரிக்க கொரோனா Beta திரிபு காரணமாக இருக்கலாம்: சுகாதாரத்துறை விளக்கம்
கோத்தாபாரு:
கிளந்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா Beta திரிபு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
அம் மாநிலத்தில் கண்டறியப்பட்ட பல்வேறு தொற்றுத் திரள்களுடன் சம்பந்தப்பட்ட 23 மாதிரிகள் அண்மையில் பரிசோதிக்கப்பட்டதாக அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஜெய்னி ஹுசின் (Zaini Hussin) தெரிவித்துள்ளார்.
"தொற்று உறுதியான அனைத்து மாதிரிகளையும் மேலதிகப் பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதில்லை. இம்மாநிலத்தில் கண்டறியப்பட்ட தொற்றுத் திரள்களுடன் தொடர்புடைய மாதிரிகள் மட்டுமே மேலதிகமாக பரிசோதிக்கப்படுகின்றன.
"இதன்வழி கிளந்தானில் அண்மையில் உறுதி செய்யப்பட்ட பெரும்பாலான தொற்றுச் சம்பவங்களுக்குக் கொரோனாவின் Beta திரிபு காரணமாக இருக்க வாய்ப்புண்டு. இந்தக் கிருமித்தொற்று திரிபு மிக வேகமாக பரவக்கூடியது.
"மேலும் அன்றாடம் பதிவாகும் சராசரி மரண எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கிளந்தானில் கடந்த ஆண்டு 7 பேர் மட்டுமே பலியான நிலையில் அந்த எண்ணிக்கை இப்போது 175 ஆக உள்ளது. Beta திரிபானது கிளந்தானில் சமூக அளவில் பரவியுள்ளது," என்றார் டாக்டர் Zaini Hussin.
நேற்று கிளந்தானில் 245 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,837 ஆக உள்ளது. மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 12 விழுக்காட்டினர், அதாவது 1.2 மில்லியன் பேர் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டுள்ளனர்.
தற்போது தினமும் 6 முதல் 8 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்த எண்ணிக்கை ஜூலை மாதத்தில் 14 ஆயிரம் முதல் 32 ஆயிரம் வரை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
