செய்திகள் மலேசியா
இவ்வாரம் மேலும் 1,500 ஊடகப் பணியாளர்களுக்கு தடுப்பூசி: டத்தோ சைஃபுதீன் அப்துல்லாஹ்
கோலாலம்பூர்:
மூன்றாவது கட்டமாக மேலும் 1,500 ஊடகப் பணியாளர்களுக்கு இந்த வாரம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டத்தோ சைஃபுதீன் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.
ஜூன் 9ஆம் தேதி அன்று 98 ஊடகவியலாளர்களுக்கும், ஜூன் 16ஆம் தேதி 771 ஊடகப் பிரதிநிதிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கப்படும் என்று குறிப்பிட்ட அமைச்சர், ஏற்கெனவே பதிவு செய்துள்ள ஊடகவியலாளர்களுக்கு விரைவில் தடுப்பூசி போடப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
"ஊடகப் பணியாளர்களுக்கு மிக விரைவாக தடுப்பூசி போடப்பட வேண்டும் என்பதை சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபாவும், தேசிய தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான அமைச்சர் கைரி ஜமாலுடினும் நன்கு உணர்ந்துள்ளனர்.
"எனவே, இது தொடர்பான நடவடிக்கைகளை அவர்கள் நிச்சயம் துரிதப்படுத்துவார்கள்," என்றார் அமைச்சர் சைஃபுதீன்.
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
