செய்திகள் மலேசியா
ஒரு பேரழிவைத் தவிர்த்துள்ளோம் என்கிறார் பிரதமர்
புத்ராஜெயா:
முழு முடக்க நிலையுடன் கூடிய MCO 3.0 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டுள்ளதால் நாடு எதிர்கொண்ட ஒரு பேரழிவு தவிர்க்கப்பட்டுள்ளதாக பிரதமர் டான்ஸ்ரீ மொஹிதின் யாசின் தெரிவித்துள்ளார்.
இன்று நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், MCO 3.0ன் முதலாவது கட்டத்தின் மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
தொற்றுப் பரவல் விகிதம் தற்போது குறையத் தொடங்கி உள்ளதாக தெரிவித்த அவர், தொற்று வரைபடத்தில் மேல்நோக்கிச் சென்ற அம்புக்குறியீடு தற்போது கீழ்நோக்கி திரும்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த மே 29ஆம் தேதி 9,020ஆகப் பதிவான அன்றாட புதுத்தொற்றுகளின் எண்ணிக்கை, திங்கட்கிழமை 4,949ஆக குறைந்துள்ளதை சுட்டிக்காட்டினார்.
"நாட்டின் சுகாதார அமைப்பால் புதிய நோயாளிகளையும் ஏற்றுக்கொண்டு சிகிச்சை அளிக்க முடிகிறது. குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருகிறது.
"இதன்மூலம் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது தெரிகிறது. நாம் ஒரு பேரழிவைத் தவிர்த்துள்ளோம்," என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
