
செய்திகள் மலேசியா
தடுப்பூசி போடுவதில் புதிய உச்சத்தை எட்டிப்பிடித்தது மலேசியா
கோலாலம்பூர்:
தடுப்பூசி போடுவதில் புதிய உச்சத்தை எட்டி உள்ளது மலேசியா.
நேற்று திங்கள்கிழமை ஒரே நாளில் சுமார் 2 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக டுவிட்டபரில் பதிவிட்டுள்ள சுகாதார அமைச்சர் ஆதம்பாபா நேற்றைய தினம் 197,963 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களில் 142,890 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் 55,073 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் போடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாடு முழுவதும் இதுவரை 4,688,233 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
மலேசியாவில் மேலும் 1,413,039 தனி நபர்கள் முழுமையாக தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே தேசிய தடுப்பூசித் திட்டம் சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும் புத்தாக்க அமைச்சருமான கைரி ஜமாலுதீன் மிக விரைவில் நாள்தோறும் 2 லட்சம் தடுப்பூசிகள் போடவேண்டும் என்ற அரசாங்கத்தின் இலக்கை ஜூலை மாதம் எட்டிப்பிடிக்க இயலும் என்றும், ஆகஸ்டு மாதம் இந்த எண்ணிக்கை 300,000 ஆக அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm