செய்திகள் மலேசியா
மலாய் ஆட்சியாளர்கள் நாளை சந்திக்கின்றனர்
கோலாலம்பூர்:
பெருந்தொற்று மற்றும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் நாளை மலாய் ஆட்சியாளர்கள் இடையேயான சந்திப்பு நடைபெற உள்ளது.
மாமன்னர் நாளை ஆட்சியாளர்களை சந்தித்துப் பேச இருப்பதை அரண்மனை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
கடந்த வாரம் நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை மாமன்னர் சந்தித்துப் பேசினார். அப்போது பெருந்தொற்று நெருக்கடி குறித்து அவர் கருத்துகளை கேட்டறிந்ததாக தெரிகிறது.
மாமன்னரைச் சந்தித்த பிறகு அவருடன் பகிர்ந்துகொண்ட கருத்துகள் குறித்து கட்சித் தலைவர்கள் சில விவரங்களைத் தெரிவித்தனர்.
இந் நிலையில் நாளை புதன்கிழமை அன்று மலாய் ஆட்சியாளர்களை மாமன்னர் சந்திக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வாரமே அறிவிக்கப்பட்டது.
நாளை பிற்பகல் 2.30 மணியளவில் மலாய் ஆட்சியாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் தொடங்கும் எனத் தெரிகிறது. அரண்மனை காப்பாளர் அறிக்கை ஒன்றில் இதை உறுதி செய்துள்ளார்.
நாளைய கலந்துரையாடலின்போது பெருந்தொற்று உட்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ஆட்சியாளர்கள் பேசுவார்கள் எனத் தெரிகிறது.
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
