செய்திகள் உலகம்
தென்கொரிய ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம்
சியோல்:
தலைநகர் சியோலில் இயங்கும் சியோல் மெட்ரோ (Seoul Metro) ரயில் நிலையத்தின் தொழிற்சங்க ஊழியர்கள் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை பலனின்றி முடிந்ததால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த மெட்ரோ நிறுவனத்தின் சுமார் 13,000 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளனர்.
அதனால் அந்த நிறுவனம் வேலையிலிருந்து ஓய்வுபெற்ற ஊழியர்களையும் தொழிற்சங்க உறுப்பினர்கள் அல்லாதவர்களையும் உடனடியாக வேலைக்கு வருமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
சியோல் மெட்ரோ நிறுவனம் 2026ஆம் ஆண்டில் 1,500க்கு மேற்பட்ட ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுவர் என்று கூறியதை அடுத்து தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளன.
நிறுவனத்தின் பாதுகாப்புக் கருதி ஊழியரணியில் அதிகமான ஊழியர்கள் வேலையில் இருக்கவேண்டும் என அவை கூறுகின்றன.
தென்கொரிய அரசாங்கம் ஊழியர்களை உடனடியாக வேலைக்குத் திரும்பி வருமாறு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உத்தரவை மீறுவோருக்கு மூவாண்டுச் சிறைத்தண்டனை அல்லது 22,000 டாலருக்கு மேல் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த உத்தரவு கூறுகிறது.
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 10:17 am
3-ஆவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
April 25, 2024, 7:11 am
கொழும்பில் பல சாலைகளில் போக்குவரத்து நிலைகுத்தியது
April 25, 2024, 7:04 am
இலங்கையின் மேம்பாட்டு திட்டங்களுக்கு ஈரான் துணை நிற்கும்: ஈரான் அதிபர் வாக்குறுதி
April 24, 2024, 12:20 pm
உக்ரைனில் உள்ள கார்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகர்ப்பு
April 24, 2024, 10:33 am
சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் இன்னும் சில வாரங்களில் வெளியேற்றப்படுவர்: ரிஷி சுனக்
April 24, 2024, 10:30 am
காசா வடக்கு எல்லையில் வசிப்பவர்கள் உடனே வெளியேற இஸ்ரேல் உத்தரவு
April 23, 2024, 6:02 pm
பாகிஸ்தானில் ஈரான் அதிபர்
April 23, 2024, 10:16 am
80க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்: நள்ளிரவில் குலுங்கிய தைவான்
April 22, 2024, 5:15 pm
இஸ்ரேல் இராணுவத்தின் உளவுத்துறை தலைவர் ராஜினாமா
April 22, 2024, 12:22 pm