
செய்திகள் உலகம்
தென்கொரிய ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம்
சியோல்:
தலைநகர் சியோலில் இயங்கும் சியோல் மெட்ரோ (Seoul Metro) ரயில் நிலையத்தின் தொழிற்சங்க ஊழியர்கள் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை பலனின்றி முடிந்ததால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த மெட்ரோ நிறுவனத்தின் சுமார் 13,000 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளனர்.
அதனால் அந்த நிறுவனம் வேலையிலிருந்து ஓய்வுபெற்ற ஊழியர்களையும் தொழிற்சங்க உறுப்பினர்கள் அல்லாதவர்களையும் உடனடியாக வேலைக்கு வருமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
சியோல் மெட்ரோ நிறுவனம் 2026ஆம் ஆண்டில் 1,500க்கு மேற்பட்ட ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுவர் என்று கூறியதை அடுத்து தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளன.
நிறுவனத்தின் பாதுகாப்புக் கருதி ஊழியரணியில் அதிகமான ஊழியர்கள் வேலையில் இருக்கவேண்டும் என அவை கூறுகின்றன.
தென்கொரிய அரசாங்கம் ஊழியர்களை உடனடியாக வேலைக்குத் திரும்பி வருமாறு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உத்தரவை மீறுவோருக்கு மூவாண்டுச் சிறைத்தண்டனை அல்லது 22,000 டாலருக்கு மேல் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த உத்தரவு கூறுகிறது.
தொடர்புடைய செய்திகள்
September 15, 2025, 9:55 pm
உணவகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: $396,000 இழப்பீடு செலுத்த உத்தரவு
September 15, 2025, 9:54 am
சிங்கப்பூரில் அதிகரித்துவரும் எலித்தொல்லை
September 14, 2025, 9:18 am
வெளி நாட்டவர்களை அகற்றக் கோரி லண்டனில் பேரணி: 26 காவல்துறையினர் காயம்
September 12, 2025, 9:54 pm
சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கூரை பெரும் சப்தத்துடன் விழுந்தது: கர்ப்பிணி காயம்
September 12, 2025, 9:24 pm
ஜப்பானில் 100 வயதைத் தொட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 100,000
September 12, 2025, 9:16 pm
பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை
September 12, 2025, 8:47 pm
கத்தார் தாக்குதல் இஸ்ரேலுக்கு இந்தியா கண்டனம்
September 11, 2025, 5:20 pm
விசா விண்ணப்பித்தவர்களிடம் பாலியல் சேவை பெற்ற ICA அதிகாரிக்கு 22 மாதச் சிறை
September 11, 2025, 3:46 pm