செய்திகள் மலேசியா
நாடு பெருந்தொற்றுப் பிடியிலிருந்து விரைவில் விடுபட்டுவிடும் என பிரதமர் நம்பிக்கை
புத்ராஜெயா:
மலேசியாவில் அதிக அளவில் தடுப்பூசி மையங்கள் திறக்கப்படுவதால் தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் நாடு பெருந்தொற்றுப் பிடியிலிருந்து விரைவில் விடுபட்டுவிடும் என பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதீன் யாசின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
"கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகிய இரு கூட்டரசுப் பிரதேசங்களும் எதிர்பார்த்ததை விட வேகமாக மந்தை நோய் எதிர்ப்புச் சக்தியை எட்டிப்பிடித்துவிடும் எனத் தெரிகிறது.
"எதிர்வரும் ஆகஸ்டு மாதத்துக்குள் அவ்விரு பிரதேசங்களும் மந்தை நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட சமூகமாக உருவெடுத்திருக்கும் என எதிர்பார்க்கலாம்," என்றார் பிரதமர் மொஹைதீன் யாசின்.

மக்கள் மத்தியில் தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. ஜூன் 11ஆம் தேதி வரை மலேசிய மக்கள் தொகையில் 13 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந் நிலையில் மக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள பிரதமர் மொஹைதீன் யாசின், மலேசியா பெருந்தொற்று நோய்ப் பிடியிலிருந்து மெல்ல விடுபட்டுவிடும் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 10:08 pm
கனமழையை தொடர்ந்து தலைநகரில் திடீர் வெள்ளம்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
