
செய்திகள் மலேசியா
தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 97% படுக்கைகள் நிரம்பிவிட்டன: ஆதம் பாபா
கோலாலம்பூர்:
நாடு முழுவதும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந் நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 97 விழுக்காடு படுக்கைகள் நிரம்பிவிட்டதாக சுகாதார அமைச்சர் ஆதம் பாபா தெரிவித்துள்ளார்.
சுவாச உதவி தேவைப்படும் 4 மற்றும் 5ஆம் வகை கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் இத்தகைய வகையைச் சேர்ந்த நோயாளிகளின் எண்ணிக்கை 6,751ஆக பதிவாகி இருந்தது என்று குறிப்பிட்டுள்ள அவர், தற்போது அந்த எண்ணிக்கை 30,287ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
கொரோனா 4ஆம் வகை நோயாளி என்றால் அவருக்கு சுவாச உதவி தேவைப்படும் என்றும் 5ஆம் வகை என்றால் கவலைக்கிடமான நிலையில் உள்ளவர்கள், செயற்கை சுவாசக் கருவி (வென்டிலேட்டர்) தேவைப்படுபவர் என்றும் சுகாதார அமைச்சு விளக்கமளித்துள்ளது.
தற்போது இவ்வகை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது கவலை அளிப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆதம் பாபா, கொரோனா பரிசோதனைகளுக்கு தனியார் கிளினிக் அல்லது மருத்துவ மையங்களில் காரணமின்றி கட்டணம் வசூலித்தால் அதுகுறித்து அரசிடம் புகார் அளிக்கலாம் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm