நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடந்த ஆட்சிகள் போன்று சுரண்டி எடுப்பதில் எனக்கு ஆர்வமில்லை: பிரதமர்

புத்ராஜெயா:

கடந்த ஆட்சிகள் போன்று சுரண்டி எடுப்பதில் எனக்கு ஆர்வமில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நாட்டில் பொது சேவைத்துறைமீது மிகப் பெரிய களங்கம் ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையை மாற்றியமைக்க வேண்டும். இதற்காக அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

பொது சேவைத்துறை பணியாளர்கள் கட்டொழுங்குடன் நடந்து கொள்ள வேண்டும்.

உறவினர்கள், நண்பர்கள் என்பதற்காக அனைத்திற்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படக்கூடாது.

கடந்த ஆட்சிகளில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளது. இனி அதுபோன்று ஏதும் நடக்க அனுமதிக்கக் கூடாது என்று என்று அவர் கூறினார்.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம், நாட்டில் மாற்றத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு அனைத்து  அரசு ஊழியர்களும் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பொருளாதாரம், ஸ்திரத்தன்மை, ஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் வீழ்ச்சியடைந்த பின்னர், புதிய தொடக்கத்திற்கான நம்பிக்கையை அன்வார் இன்று காலை பிரதமர் துறை அமைச்சு அலுவலகத்தில் அரசாங்க ஊழியர்களுக்கான தனது முதல் உரையில் வெளிப்படுத்தினார்

அமைச்சர்களாகத் தேர்ந்தெடுக்கப்படும் என் நண்பர்கள் அனைவரும் இந்தக் குறுகிய காலக்கட்டத்தில் நாட்டில் பல மாற்றங்களைக் கொண்டு வர தன்னோடு சேர்ந்து பயணிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset