செய்திகள் மலேசியா
சிசுவின் சடலத்தை ஆற்றங்கரையில் வீசிய கம்போடிய, நேப்பாள தம்பதியர் கைது
லாருட்:
சிசுவின் சடலத்தை ஆற்றங்கரையில் வீசிய கம்போடிய, நேப்பாள தம்பதியரை போலிசார் கைது செய்துள்ளனர்.
தைப்பிங் போலிஸ் தலைவர் முகமட் நசீர் இஸ்மாயில் இதனை உறுதிப்படுத்தினார்.
தைப்பிங் சிம்பாங், லாருட் ஆற்றங்கரையில் நேற்று முன்தினம் பிறந்த பெண் குழந்தையின் சடலத்தை போலிசார் கண்டெடுத்தனர்.
தைப்பிங் மருத்துவமனை அவசரப் பிரிவில் இருந்து 43 வயதான கம்போடியர் ஒருவர் அதிகாலை 3.32 மணிக்குப் பிரசவித்ததாக போலிசாருக்கு புகார் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து கம்போடிய, நேப்பாள தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 318 இன் படி விசாரணை நடத்தப்பட்டது,
இது வேண்டுமென்றே உடலை ரகசியமாக அப்புறப்படுத்துவதன் மூலம் குழந்தையின் பிறப்பை மறைக்கிறது.
இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 15, 2026, 4:05 pm
மோட்டார் திருட்டு குற்றச்சாட்டு: பள்ளிவாசல் முன்பு இளைஞர்கள் மோதல்
March 15, 2026, 4:03 pm
ஒரே கணத்தில் வீடும், ஹரிராயா ஏற்பாடுகளும் தீயில் சாம்பலானது
March 15, 2026, 2:47 pm
போலி முதலீட்டு மோசடி: ஆண்டின் தொடக்கத்தில் 188 மில்லியன் ரிங்கிட் இழப்பு
March 15, 2026, 2:30 pm
“ரோன்95 பெட்ரோலின் விலையில் எந்த மாற்றமும் இல்லை”: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு
March 15, 2026, 1:52 pm
எம்.ஆர்.டி புத்ராஜெயா சேவை பாதிப்பு: ரயில் கம்பி திருடிய நால்வர் கைது
March 15, 2026, 1:48 pm
"நோன்புப் பெருநாளுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்படும்": பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் அறிவிப்பு
March 15, 2026, 1:43 pm
