நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அடுத்த இரு வாரங்கள் முக்கியமானவை: டாக்டர் நூர் ஹிஷாம்

கோலாலம்பூர்:

கொரோனா கிருமித் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அடுத்த இரு வாரங்கள் முக்கியமானவை என்று சுகாதார அமைச்சின் தலைமை  இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.

அன்றாடம் பதிவாகும் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை இன்னும் ஏறுமுகமாகவே  இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த இரு வாரங்களுக்குள் அன்றாட தொற்று எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கும் குறைவாக கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

"இப்போதும்கூட சிலர் பயணங்களை மேற்கொள்கிறார்கள். மேலும் சிலர் ஒன்று கூடி சிலவற்றைக் கொண்டாடுகிறார்கள். இது வருத்தமளிக்கிறது. இது பொறுப்பற்ற செயல்.

"கிருமித்தொற்று சங்கிலியை உடைக்கும் நடவடிக்கையில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் அப்பொழுதுதான் இது சாத்தியமாகும்," என்று தமது பதிவில் நூர் ஹிஷாம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் நாட்டில் 6,849 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவான நிலையில், நேற்று அந்த எண்ணிக்கை 5,793 ஆக குறைந்தது. இந்நிலையில் நூர் ஹிஷாம் அனைவரது ஒத்துழைப்பையும் கோரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset