செய்திகள் மலேசியா
1.3 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் முழுமையாக போடப்பட்டுள்ளது: சுகாதார அமைச்சு
புத்ராஜெயா:
மலேசியாவில் 1.3 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் முழுமையாக போடப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
3,030,096 தனி நபர்களுக்கு ஒரு தவணை தடுப்பூசி போடப்படுள்ளதாகவும் 1,331,262 பேருக்கு இருதவணைகள் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா தெரிவித்துள்ளார்.
ஆக மொத்தத்தில் நாடு முழுவதும் இதுவரை 4,361,358 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக இன்று டுவிட்டர் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலாங்கூரில் 1,74,302 பேருக்கும், சரவாக்கில் 141,972, பேராக்கில் 126,876, ஜொகூரில் 126,673, கோலாலம்பூரில் 122,797 பேருக்கும் இருதவணை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
நேற்று ஒரேநாளில் 133,804 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா மேலும் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் குடிமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை நாடு எட்டிப்பிடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
April 10, 2026, 11:20 pm
ரபிசி குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு; பொருளாதாரத்திற்கே அதிக முன்னுரிமை: பிரதமர்
April 10, 2026, 11:19 pm
எஸ்பிஎம் தேர்வின் நன்னெறி பாடத்தில் ஏ எடுப்பது அவ்வளவு சிரமமா?: டத்தோ நெல்சன் கேள்வி
April 10, 2026, 11:17 pm
தெலுக் இந்தானில் சித்ரா பௌர்ணமி திருவிழா; தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணாது: சிவநேசன்
April 10, 2026, 11:16 pm
80ஆம் ஆண்டு நிறைவு விழா; மஇகாவின் அடையாளத்தையும் சாதனையையும் பறைசாற்றும்: டத்தோ முருகையா
April 10, 2026, 3:43 pm
நாற்காலியால் மனைவியை அடித்த வேலையில்லாதவருக்கு RM3,500 அபராதம்
April 10, 2026, 3:33 pm
மலேசியாவின் 6 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துவிட்டன
April 10, 2026, 3:32 pm
பற்றி எரிந்த அடுக்குமாடி வீடு: 60 வயது முதியவர் உடல் கருகிய நிலையில் மீட்பு
April 10, 2026, 3:23 pm
பெலூரானில் 157 மாணவர்கள் தவிப்பு: வெயிலிலும் மழையிலும் கூடாரத்தின் கீழ் கல்வி பயிலும் அவலம்
April 10, 2026, 12:55 pm
