
செய்திகள் மலேசியா
கொரோனா UPDATE: 101 வயது மூதாட்டி உட்பட 76 பேர் மரணம்
கோலாலம்பூர்:
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக 76 மரணச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. அவர்களில் 101 வயது மூதாட்டியும் அடங்குவார்.
கிருமித்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முழு முடக்க நிலை உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 914ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 459 பேருக்கு சுவாச உதவி அளிக்கப்பட்டுள்ளது.
இதே வேளையில் 76 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 101 வயதான, சிலாங்கூரைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து கிருமித்தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,844ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவமனைகளில் இருந்து 8,334 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 572,113ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
இதே போல் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 652,204ஆக கூடியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm