
செய்திகள் மலேசியா
மலேசியாவிலிருந்து ரோஹின்யா அகதிகளை வெளியேற்றினால், அவர்களை எந்த நாடும் ஏற்கத் தயாராக இல்லை: குடிநுழைவுத்துறை இயக்குனர்
கோலாலம்பூர்:
மியான்மர் உட்பட வேறு எந்த நாடும் ரோஹிங்கியா அகதிகளை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாததால் மலேசியாவில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மலேசியாக் குடிநுழைவுத் துறை எஇயக்குநர் டத்தோ கைருல் டைமி தாவூத் (Datuk Khairul Dzaimee Daud) தெரிவித்திருக்கிறார்.
சினார் ஹரியான் பத்திரிகையுடனான ஒரு நேர்காணலில், கைருல் இவ்வாறு கூறினார். மியான்மரை விட்டு வெளியேறும்போது ரோஹிங்கியாக்கள் மலேசியாவைத் தங்கள் புகலிடமாகவும் பாதுகாப்பானதாகவும் கருதினார்கள்.
“2019 முதல், மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து ரோஹிங்கியா அகதிகளும் நாடு முழுவதும் பல்வேறு குடிநுழைவு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தடுப்புக்காவல்களில் வைக்கப்பட்டுள்ள அனைத்து ரோஹின்யா அகதிகளும் ஜூன் 1 ஆம் தேதியன்று மியான்மருக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள். ஏனெனில், அவர்களது தாய்நாடான மியான்மர் அவர்களைத் திரும்ப அழைத்துச் செல்ல தயங்குகிறது.
அவர்கள் தகுந்த ஆவணம் இல்லாமல் குடியேறியவர்கள் என்றாலும், மலேசியா அவர்களின் சொந்த நாடான மியான்மர் அவர்களை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுத்தால் அவர்களை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்ப முடியாது என்று அவர் விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm