
செய்திகள் வணிகம்
உலக கோப்பை கால்பந்து: கத்தாருக்கு இந்தியா ஆட்டிறைச்சி ஏற்றுமதி
கொல்கத்தா:
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்த இருக்கும் கத்தாருக்கு ஆட்டு இறைச்சி ஏற்றுமதியை மேற்குவங்க அரசு தொடங்கியுள்ளது. .
இதுகுறித்து மாநில கால்நடை வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்வபன் தேவ்நாத் கூறுகையில்,
கத்தாருக்கு மட்டுமின்றி மத்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்திடமிருந்து (ஏபிஇடிஏ) அனுமதி பெற்றுள்ள குவைத், ஹாங்காங், மாலத் தீவுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் மேற்குவங்கத்திலிருந்து இறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மாநில கால்நடை மேம்பாட்டுக் கழகத்துக்குச் சொந்தமான ஹரிங்கடாவில் உள்ள ஆடு வெட்டும் மையத்திலிருந்து இறைச்சி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் கத்தார் நாட்டுக்கு இறைச்சியை கூடுதலாக ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
மொத்தமாக 1.2 மெட்ரிக் டன் இறைச்சியை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் இதுவரை கிடைத்திருக்கிறது. மாதத்துக்கு 7 டன் இறைச்சி 6 பிரிவுகளாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன' என்றார்.
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 2:16 pm
மும்பையில் அமைகிறது முதல் டெஸ்லா ஷோரூம்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm