செய்திகள் வணிகம்
மலேசிய விமானங்களில் இளநீர் விற்பனை: உலக சந்தையை நோக்கும் உள்ளூர் தொழில்முனைவோர்
கோலாலம்பூர்:
சர்க்கரை சேர்க்கப்படாத மலேசிய இளநீர் தற்போது உலக விமானப் பயணிகளிடம் உயர்தர பானமாக இடம் பிடித்து வருகிறது. என்பி ஆசியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நவநித் பிள்ளை, உள்ளூர் இளநீரை பிரீமியம் தயாரிப்பாக உயர்த்தும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளார்.
கடந்த டிசம்பரிலிருந்து, அவரது நிறுவனத்தின் இளநீர் பாத்திக் ஏர் நிறுவனத்தின் உள்நாட்டு, சர்வதேச விமானங்களில் வழங்கப்படுகிறது.
கடுமையான விமான உணவு பாதுகாப்பு சோதனைகளை கடந்து இந்த அனுமதி கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.
இளநீர் உடலுக்கு ஈரப்பதம் வழங்குவதோடு, ஜெட் லேக் குறையவும் உதவுகிறது என்றார்.
தற்போது சிங்கப்பூர் சந்தையிலும் நுழைந்துள்ள இந்த தயாரிப்பை, தொலைதூர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய புதிய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் நிறுவனம் முக்கியமாகக் கருதுகிறது; தேங்காய் ஓடுகள் உரமாக மாற்றி மீண்டும் தோட்டங்களுக்கு வழங்கப்படுகின்றன.
முன்னதாக பதிப்புத்துறையில் பணியாற்றிய நவநித், கோவிட் கால மாற்றங்களுக்குப் பிறகு விவசாயத்தில் ஈடுபட்டார்.
அரசின் உதவியுடன் முதலில் அன்னாசி பயிரிட்ட அவர், பின்னர் கோலா சிலாங்கூரிலிருந்து தேங்காய்களை கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு விற்பனை செய்தார். நாளுக்கு 30 தேங்காய்களிலிருந்து ஆயிரங்களாக வளர்ந்த வணிகம், பின்னர் பாட்டிலில் அடைக்கும் தொழிற்சாலையாக மாறியது.
- கிரித்திகா
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 5:34 pm
5 பேர் அமரக்கூடிய காரை அறிமுகம் செய்கிறது Ferrari
May 26, 2026, 9:56 am
அமெரிக்கா-ஈரான் அமைதிப் பேச்சால் ரிங்கிட் உயர்வு: சரிவைச் சந்தித்த இந்திய ரூபாய்
May 20, 2026, 11:40 am
நச்சுணவால் நெஸ்ட்லெ, டெனன் பால்மாவு மீட்பு: நிறுவனங்கள்மீது விசாரணை
May 19, 2026, 8:48 pm
Starbucks Korea வெளியிட்ட புதிய குவளை: பறிபோனது CEOவின் பதவி
May 15, 2026, 12:22 pm
BSN வங்கி குலுக்கலில் 10 லட்சம் ரிங்கிட்டை ஆசிரியர் முனீஸ்வரன் மணியம் வென்றார்
May 14, 2026, 4:26 pm
சபாவில் இருந்து ஆப்பிரிக்கா வரை: பனைத் தொழிலில் புதிய பொருளாதாரப் புரட்சி
May 11, 2026, 5:05 pm
