செய்திகள் வணிகம்
மொத்த விற்பனை சந்தையான பாசார் போரொங்கில் சட்டவிரோத வியாபாரம்: கோலாலம்பூர் மாநகராட்சி அமலாக்கத்தினர் அதிரடி நடவடிக்கை
கோலாலம்பூர்,
கோலாலம்பூர் மொத்த விற்பனை சந்தையான பாசார் போரோங் பகுதியில் வெளிநாட்டவர்கள் மேற்கொண்ட உரிமமற்ற வணிக நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) கடுமையான அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டு, 21 வணிகப் பொருட்களைப் பறிமுதல் செய்து இடமாற்றம் செய்துள்ளது. இதனுடன், சட்ட மீறலில் ஈடுபட்ட பலருக்கு அபராத அறிவிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
ஜனவரி 5 முதல் நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையில், உரிமம் இன்றி இயங்கிய மொத்த வணிகக் கடைகள், உணவகங்கள், காய்கறி, பழ வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட மீன், கோழி, இறால், காய்கறிகள், பழங்கள், வணிக உபகரணங்கள் அனைத்தும் கோலாலம்பூர் மாநகராட்சி அமைப்பிடத்திற்கு (DBKL) அனுப்பப்பட்டன.
சட்ட ஒழுங்கை உறுதி செய்ய, இந்த பகுதிகளில் அமலாக்க நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என கோலாலம்பூர் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
- கிரித்திகா
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 5:34 pm
5 பேர் அமரக்கூடிய காரை அறிமுகம் செய்கிறது Ferrari
May 26, 2026, 9:56 am
அமெரிக்கா-ஈரான் அமைதிப் பேச்சால் ரிங்கிட் உயர்வு: சரிவைச் சந்தித்த இந்திய ரூபாய்
May 20, 2026, 11:40 am
நச்சுணவால் நெஸ்ட்லெ, டெனன் பால்மாவு மீட்பு: நிறுவனங்கள்மீது விசாரணை
May 19, 2026, 8:48 pm
Starbucks Korea வெளியிட்ட புதிய குவளை: பறிபோனது CEOவின் பதவி
May 15, 2026, 12:22 pm
BSN வங்கி குலுக்கலில் 10 லட்சம் ரிங்கிட்டை ஆசிரியர் முனீஸ்வரன் மணியம் வென்றார்
May 14, 2026, 4:26 pm
சபாவில் இருந்து ஆப்பிரிக்கா வரை: பனைத் தொழிலில் புதிய பொருளாதாரப் புரட்சி
May 11, 2026, 5:05 pm
