நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் இன்று புதிதாக 5,671 பேருக்கு கிருமி தொற்று; சிலாங்கூர் 1510 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர்:

மலேசியாவில் இன்று புதிதாக 5,671 பேருக்கு கிருமி தொற்றியிருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து நாட்டில் கிருமித்தொற்றால் பாதிக்கப்படோர் ஒட்டுமொத்த எண்ணிக்கை 639,562 ஆக கூடியுள்ளது.

வழக்கம்போல் இன்றும் அதிக பாதிப்புள்ள மாநிலங்களின் பட்டியலில் சிலாங்கூர் முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1510 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

இரண்டாம் இடத்தில் கோலாலம்பூர் கூட்டரசுப்பிரதேசம் உள்ளது. அங்கு மட்டும் 769 பேர் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

சரவாக் 631 பேரும் நெகிரி செம்பிலானில் 593 பேரும் ஜொகூரில் 524 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset