நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எல்ஆர்டி 3 திட்டம் செயல் வடிவம் பெற்றதால்  நஜிப்பின் உணர்வுகள் வெளிப்பட்டன: கைரி

ஜொகூர்பாரு:

எல்ஆர்டி 3 திட்டம் செயல்வடிவம் பெற்றதால் தான் டத்தோஸ்ரீ நஜிப்பின் உணர்வுகள் தற்போது வெளிப்பட்டுள்ளன.

முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் இதனை கூறினார்.

ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலை  முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் விவகாரத்துடன் தொடர்புபடுத்தும் முயற்சிகள் நடக்கின்றன.

இதற்கு எல்ஆர்டி திட்டம் தொடர்பான விவாதத்தை எதிர்க்கட்சிகள் கட்டுப்படுத்தத் தவறியதாலேயே ஏற்படுகின்றன.
 
அரசாங்கம் சமீபத்தில் எல்ஆர்டி செயல்பாட்டைத் தொடங்கி வைத்திருந்தபோதிலும், பொதுமக்களின் கவனம், குறிப்பாக சமூக ஊடகங்களில், இத்திட்டத்தைத் தொடங்கியதற்காக நஜிப் நிர்வாகத்தைப் பாராட்டுவதிலேயே அதிகமாக இருந்தது என்று அவர் கூறினார்.

நான் செய்திகளை அதிகம் படிப்பதில்லை, கருத்துகளைப் படிக்கிறேன். பெரும்பாலான கருத்துகள் தற்போதைய பிரதமருக்கு நன்றியை வெளிப்படுத்தவில்லை என்பதை நான் காண்கிறேன்.

மாறாக, நான் டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு நன்றியைத் தெரிவிக்கிறேன், நன்றி பாஸ், என்று ஜொகூரில் தேசிய முன்னணி பிரச்சாரத்தில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset