
செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் மீலாது விழா: டாக்டர் எம். சதீதுத்தீன் பாகவி சிறப்புரை
சிங்கப்பூர்:
இறுதித்தூதர் அண்ணல் நபி பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவுகளை சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம் ஜமாத் அமைப்பும் மஸ்ஜித் சுல்தான் நிர்வாகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
இந்த மீலாது விழா சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி சிங்கப்பூர் மஸ்ஜித் சுல்தான் அரங்கில் எதிர்வரும் அக்டோபர் 22ஆம் தேதி சனிக்கிழமையும் அக்டோபர் 24ம் தேதி திங்கள்கிழமையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இரு தினங்களும் மாலை 4.30 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும்.
தமிழகத்தின் பிரபல பேச்சாளர் சென்னை அடையார் மௌலானா டாக்டர் எம். சதீதுத்தீன் ஃபாஜில் பாகவி நிகழ்வில் பங்கேற்று நபி முஹம்மது அவர்களின் வாழ்வியலையும் அதில் பொதிந்துள்ள வழிகாட்டுதல்களையும் பேச இருக்கின்றார் என்று சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம் ஜமாத் அமைப்பின் தலைவர் வாவூ ஷாஜகான் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை மஸ்ஜித் சுல்தான் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் குடும்பத்தோடு கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
April 23, 2025, 12:40 pm
சீனா மீதான 145 சதவீத வரி அதிகமாக இருப்பதை டிரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார்
April 22, 2025, 12:49 pm
போப் ஃபிரான்சிஸ் பக்கவாதம், இதயச் செயலிழப்பால் காலமானார்: வத்திகன் தகவல்
April 21, 2025, 5:09 pm
அமெரிக்காவுடன் வணிக ஒப்பந்தம் செய்யும் நாடுகளுக்குச் சீனா எச்சரிக்கை
April 21, 2025, 4:36 pm
31-ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறவுள்ளார் கமி ரீட்டா
April 21, 2025, 4:32 pm
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸ் தனது 88 வயதில் காலமானார்
April 21, 2025, 10:48 am
14 வயது சிறுமியைக் கொன்ற சிங்கம்: கென்யாவில் பரபரப்பு
April 21, 2025, 10:35 am
ஆஸ்திரேலியாவின் ராட்சத அலைகளில் சிக்கி 6 பேர் மாண்டனர்
April 20, 2025, 4:16 pm