
செய்திகள் உலகம்
லண்டனில் உக்ரைன் நாட்டு அமைதி பேச்சுவார்த்தை: அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ கலந்துகொள்ள மாட்டார்
வாஷிங்டன்:
உக்ரைனில் நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நிலையில் லண்டனில் உக்ரைன் நாட்டு அமைதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ கலந்துகொள்ள மாட்டார் என்று வெளியுறவு துறையின் பேச்சாளர் டாமி ப்ரூஸ் கூறினார்.
லண்டனில் நடைபெறும் பேச்சுவார்த்தையை தாம் கவனித்து வருவதாகவும் விரைவில் UKவிற்கு தாம் பயணத்தை மேற்கொள்வேன் என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.
இந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் உக்ரைன் நாட்டிற்கான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் சிறப்பு அதிகாரி ஜெனரல் கெய்த் கெல்லோக் கலந்து கொள்வார் என்று அவர் குறிப்பிட்டார்.
உக்ரைனில் போர்நிறுத்தம் கொண்டு வருவதற்கு அமெரிக்கா நடுவர் பணியை மேற்கொள்வதாக இதற்கு முன் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 20, 2025, 5:15 pm
மனித இயந்திரங்களால் மனிதர்களின் வேலை பறிபோகாது
May 20, 2025, 12:21 pm
மாதவிடாய்ப் பொருள்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,000 வைரக் கற்கள்
May 20, 2025, 10:16 am
நூலகத்தில் டுரியான் சாப்பிட்ட ஆடவர்: உடனடியாக பாதுகாவலரால் வெளியேற்றப்பட்டார்
May 20, 2025, 10:14 am
காஸா பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம்: இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு சூளுரை
May 19, 2025, 12:54 pm
முன்னாள் அமெரிக்க அதிபர் பைடனுக்கு தீவிர புற்றுநோய்
May 18, 2025, 11:50 pm
10 நிமிடங்களாக நடுவானில் கேட்பாரன்றி பறந்த விமானத்தால் பரபரப்பு
May 18, 2025, 11:15 am