நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

லண்டனில் உக்ரைன் நாட்டு அமைதி பேச்சுவார்த்தை: அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ கலந்துகொள்ள மாட்டார்

வாஷிங்டன்: 

உக்ரைனில் நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நிலையில் லண்டனில் உக்ரைன் நாட்டு அமைதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. 

இந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ கலந்துகொள்ள மாட்டார் என்று வெளியுறவு துறையின் பேச்சாளர் டாமி ப்ரூஸ் கூறினார். 

லண்டனில் நடைபெறும் பேச்சுவார்த்தையை தாம் கவனித்து வருவதாகவும் விரைவில் UKவிற்கு தாம் பயணத்தை மேற்கொள்வேன் என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார். 

இந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் உக்ரைன் நாட்டிற்கான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் சிறப்பு அதிகாரி ஜெனரல் கெய்த் கெல்லோக் கலந்து கொள்வார் என்று அவர் குறிப்பிட்டார். 

உக்ரைனில் போர்நிறுத்தம் கொண்டு வருவதற்கு அமெரிக்கா நடுவர் பணியை மேற்கொள்வதாக இதற்கு முன் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset