நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆஸ்திரேலியாவின் ராட்சத அலைகளில் சிக்கி 6 பேர் மாண்டனர்

மெல்பர்ன்:

ஆஸ்திரேலியாவின் சில இடங்களில் ராட்சத அலைகளில் சிக்கிய 6 பேர் மாண்டனர்.

சில அலைகள் 3.5 மீட்டர் வரை உயர்ந்ததாகத் தெரிகிறது.

வாரயிறுதியில் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) , விக்டோரியா (Victoria) ஆகிய மாநிலங்களில்  ராட்சத அலைகளை எதிர்பார்க்கலாம் என்று அதிகாரிகள் ஏற்கெனவே எச்சரித்தனர்.

ஏப்ரல் 20 சிட்னி நகருக்கு அருகே மீன் பிடிக்கச் சென்ற இருவர் அலையில் சிக்கினர்.

அவர்களில் ஒருவர் மட்டுமே பிழைத்ததாக அதிகாரிகள் கூறினர்.

ஏப்ரல் 18-ஆம் தேதி நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மூவர் மூழ்கி மாண்டனர்.

மெல்பர்னில் கடலுக்குள் இழுக்கப்பட்ட இருவர் மாண்டனர்.

இந்நிலையில் அலைகளில் சிக்கிய மேலும் இருவரைத் தேடும் பணி தொடர்வதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இருவரையும் வெள்ளிக்கிழமை முதல்  காணவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset