நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

14 வயது சிறுமியைக் கொன்ற சிங்கம்: கென்யாவில் பரபரப்பு 

நய்ரோபி: 

14 வயது சிறுமியை சிங்கம் ஒன்று கொன்றதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

ஆப்பிரிக்கா நாடான கென்யாவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

அந்த சிங்கம் சிறுமியைத் தாக்கியதாக மற்றொரு இளைஞர் பார்த்ததாக கென்யா வனவிலங்கு துறை தெரிவித்தது 

பலியான சிறுமியின் உடல் ஆற்றங்கரையோரம் மீட்கப்பட்ட நிலையில் அங்கு சிங்கம் எதுவும் காணப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர் 

சிங்கத்தைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை கென்யாவின் யெரி கவுண்டியில் 54 வயது ஆடவரை யானை ஒன்று கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset