நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீனா மீதான 145 சதவீத வரி அதிகமாக இருப்பதை டிரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார்

வாஷிங்டன்:

சீனா மீதான 145 சதவீத வரி விகிதம் அதிகமாக இருப்பதை அமெரிக்க டொனால்டு டிரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனால் இந்த வரி   கணிசமாகக் குறைக்கப்படும் என்று அவர் நம்புகிறார்.

145 சதவீதம் மிக அதிகம் என்பது சரி தான். அது அவ்வளவு அதிகமாக இருக்கப் போவதில்லை. அது முன்பே இருந்திருக்கிறது.

ஃபெண்டானில் பிரச்சினையைப் பற்றி நாங்கள் பேசுகிறோம். இது 145 சதவீதமாக அதிகரிக்க பல காரணங்களை கொண்டுள்ளது.

அது அவ்வளவு அதிகமாக இருக்கப் போவதில்லை என்று டிரம்ப் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இது நிறைய குறைக்கப்படும், ஆனால் அது பூஜ்ஜியமாக இருக்காது.

முன்னதாக வரி விகிதம் பூஜ்ஜியமாக இருந்தது. அந்த நிலைமை அமெரிக்காவை அழிக்க வழிவகுத்தது.

சீனா எங்களை ஏமாற்றுகிறது, அது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படாது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset